புதன், 8 ஜனவரி, 2020

பேச்சுவார்த்தைக்கு வந்த சுலைமானியை அமெரிக்க கொன்றுவிட்டது .. இராக் குற்றச்சாட்டு


Mahalaxmi : ஒரே நாளில் உச்சத்துக்கு சென்ற டிரம்ப், இப்பொழுது சற்றும் எதிர்பாரா அடியில் தலைகீழாக தொங்கி கொண்டிருக்கின்றார், இனி அவருக்கு மாபெரும் சிக்கல் ஏற்படலாம் அவரின் அரசியல் வாழ்வே நொறுங்கிவிடலாம்
விஷயம் அவ்வளவு கடுமையானது
முதல் அடி கொடுத்திருப்பவர் ஈராக்கிய பிரதமர், அவர் "அமெரிக்கா எங்களிடம் சுலைமானியினை அழைத்து சமரசமாக பேசி பிரச்சினையினை தீருங்கள் என சொன்னார், நாங்களும் நம்பி வரசொன்னோம், சுலைமானி அப்படித்தான் வந்தார்
வந்தவரைத்தான் கொன்றுவிட்டார்கள், இந்த கொடும் வஞ்சகம் எங்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது, இனி அமெரிக்காவுக்கும் எங்களுக்கும் எக்காலமும் உறவு இல்லை, அமெரிக்கா ஈராக்கை விட்டு கிளம்பலாம்"
ஆம் இது சாதாரண விஷயம் அல்ல,
பொதுவாக உளவு அமைப்புகள் இப்படி தந்திரமாக செய்யும் அடிமட்ட ஆட்களை கைக்குள் போட்டு மேல் மட்டத்தை நெருங்கி எதிரியினை அழைக்க சொல்லி பலமுறை தப்பவிட்டு எதிர்பாரா நேரம் விபத்தாகவோ ஊசியிலோ உணவிலோ காற்றிலோ விஷம் கலந்தோ முடித்துவிடுவார்கள்

ஆனால் அமெரிக்க அதிபரே ஒரு உறுதிமொழி கொடுத்து அது மீறபட்டு கொலை நடந்ததென்றால் ஈராக் என்ன, எந்த நாடும் தாங்காது
விஷயத்தை வெளியிடுவது சாதாரணம் அல்ல என்பது ஈராக்குக்கும் தெரியும், ஆனால் வலுவான சக்தி ஒன்று சொல்ல வைத்திருக்கின்றது
இதனிடையே சுலைமானியின் இறுதி ஊர்வலமும் அஞ்சலியும் டெஹ்ரானில் நடந்தது, மொத்த டெஹ்ரானும் வந்து அழுதது, பல லட்சம் பேர் ஆத்திரத்தில் கத்திகொண்டிருந்தார்கள்
உச்ச தலைவர் அலிகோமேனி கண்ணீர் விட்டதும் ஈரான் முழுக்க ஒரு எழுச்சி ஏற்பட்டது
அந்த எழுச்சி ஈராக்கிலும் தெரிந்தது, மொத்த ஈராக்கும் அமெரிக்காவே வெளியே போ, என கத்த தொடங்கியாயிற்று
அமெரிக்காவின் நிலை கிட்டதட்ட வியட்நாம் போர் முடிவில் அமெரிக்க மக்கள் காட்டிய எதிர்ப்பு போல் ஆயிற்று, பொய் சொல்லியா சுலைமானியினை கொன்றார் டிரம்ப்? ச்ச்சீ இதை கூட இப்படியா செய்வார் என கடும் முணுமுணுப்பில் இறங்கிவிட்டார்கள்
அமெரிக்காவின் கவுரவம் உலகம் முன்னால் நொறுங்கி கிடப்பதை அவர்களால் ஏறேடுத்தும் பார்க்கமுடியவில்லை
ஈராக் முழுக்க போராட்டம் வலுத்துவிட்டது, ஈராக்கிய ராணுவமும் பாதுகாப்பு அமைப்பும் சொந்த மக்களை கட்டுபடுத்த மறுத்துவிட்டன‌
இனி அமெரிக்க படைகள் ஈராக்கில் ஈராக்கிய மக்களை சுட்டால் விஷயம் வேறுமாதிரி ஆகிவிடும், இனி அவர்கள் கிளம்புவதுதான் சரி
சுலைமானியினை கொன்றுவிட்டால் என்னாகிவிடும்? யார் நம்மோடு யுத்தம் தொடுத்து வெல்லமுடியும் என படைகளை நம்பிய அமெரிக்கா இப்பொழுது குழப்பத்தில் இருக்கின்றது
ஈரானும் ஈராக்கும் சேர்ந்து அமெரிக்காவினை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகின்றது
டிரம்ப் மேல் கொலைகுற்றம் சாட்டபட்டிருக்கின்றது, சுலைமானியினை கொல்ல உத்தரவிட்டது நானே என அவர் பகிரங்கமாக ஒப்புகொண்டது அவருக்கே சிக்கலாயிற்று
இல்லாவிட்டால் வழிதவறிய ஏவுகனை, தவறான தாக்குதல் என எதையாவது சொல்லி அமெரிக்கா சமாளிக்கும், இனி வழியே இல்லை
ஈராக் பிரதமரிடம் சுலைமானியினை அழைத்து பேசுங்கள் என சொன்ன டிரம்ப், இப்பக்கம் சுலைமானியினை கொல்ல உத்தரவிட்டது என இரு விவகாரமும் அம்பலமானதில் அமெரிக்கா அதிர்ந்து கிடக்கின்றது
டிரம்ப் அப்பொழுதும் திருந்தவில்லை, "டேய் ஈராக் மக்களே, எங்களை வெளியே போக சொன்னால் உங்களுக்கு பொருளாதார தடை டா, வாழமுடியாதுடா" என மிரட்டிகொண்டிருக்கின்றார்
"இப்பொழுது மட்டும் வாழவா செய்கின்றோம், போய்யா' என சொல்லியபடி ஈராக்கிய மக்கள் போர்கோலம் பூண்டாயிற்று
YAS_RAHIM

கருத்துகள் இல்லை: