சனி, 23 பிப்ரவரி, 2019

தீண்டாமை பள்ளிகள் .. வித்தியாலயா .. வித்தியாஷ்ரம் .. ஆஷ்ரம் ...

Shalin Maria Lawrence : "வித்யாஷ்ரமம்" "வித்யாலயா" என்று எப்பொழுது பள்ளிகளுக்கு பெயரிட்டார்களோ அன்றே நவீன தீண்டாமை பள்ளிகளில் தோன்றி விட்டது.
குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை அள க்காமல்,பல்முனை திறனை அளக்காமல் வெறும் பள்ளியின் பெயரை வைத்து சுயஇன்பம் காணும் கூட்டம் ஒருபுறம் வளர்ந்து.
அதுவே அந்த பள்ளியின் பெயரை உச்சரிக்கும்போது வாயில் எச்சயை குதப்பிக்கொண்டு பேசுவது போல் உச்சரிக்கவேண்டும். அப்பொழுது ஸ்டேட்டஸ் இன்னும் உயரும் என்கிற அற்ப நம்பிக்கை வேறு.
ஒரு சக பணியாளரின் மனைவி சொல்லிற்று "matriculation ல இருந்து cbse மாத்திட்டோம்.அங்க கண்ட குழந்தையும் படிக்குது அதுங்க கிட்ட இருந்து நம்ம கொழந்த கத்துக்க கூடாத பாஷாயெல்லாம் கத்துகிட்டா?"
இந்த ஆஷ்ரம் கீஷ்ரம் எல்லாமே குல கல்வி முறை போலதான்.ஜாதிய நிலையில் மேலே இருக்கும் பள்ளிகள். அப்படியே தப்பி தவறி நம் பிள்ளைகளை வீராப்பிற்காக அங்கே சேர்த்துவிட்டால் அவர்களை அங்கேயே சமஸ்க்ருதமயம் படுத்தி விட வேண்டும்.
இந்தம்மா ப்ராமினா இருக்காது மொய்லியாரா இருக்கும் ஆனா பேச்சு "அவா டீச்சர் சரி இல்ல ,என் பொண்ணு ஹோம் ஒர்க் பண்ணின்ட்ருக்கா" அப்படினு பேசும்.
கீழ்மையிலும் கீழ்மை.
பின்பு பரதநாட்யம் ,கர்நாடிக் கிளாஸ் என்று தமிழ் பிள்ளை ஆரியனாகி போவான்.
என் உறவினர் ஒருவர் க்ரிஷ்டவர் ,தன் பிள்ளை keyboard வாசிக்க வேண்டும் என்று அத்தனை அடம், அவனுக்கோ பறை பிடித்திருக்கிறது ஆனால் அவனை பறை பற்றி பேச கூட விடுவதில்லை... பறை அசிங்கம் அந்தமாவிற்கு. அந்த அம்மாவின் மாமனாரின் குல தொழிலே அதுதான்.

சில பள்ளிகள் இது போன்ற பைத்தியகாரத்தனங்களை செய்ய வைக்கும்.
பின்னே தனிமனித அறிவிற்கும் கல்வி திட்டத்திற்கும் சம்பந்தம் கிடையாது என்று கல்வி ஆராய்ச்சியாளர்கள் சொன்னலும் இங்கே நிலவும் பொது புத்தி வேறு.
சமச்சீர் கல்வி திட்டத்தில் படித்தவர்கள் முட்டாள்கள் ,cbse திட்டத்தில் படித்தவர்கள் அறிவாளிகள் என்கிற ஒரு புத்தி.
Cbse படித்த பெண் ஒருத்தி சுட்டு போட்டாலும் பொது அறிவு கிடையாது ,ஆங்கிலம் வரவே வராது...படித்தது ஆங்கில வழி கல்வி.
தமிழ் மீடியம் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தை அறிவியலில் சிறந்து விளங்குகிறது ,ஆசிரியருக்கு சொல்லி கொடுக்கிறது.ஆங்கிலம் அழகாக பேசுகிறது.
அறிவு ,திறன் என்பதெல்லாம் புத்தகம் சார்ந்ததல்ல என்று புரியாத படிப்பு என்ன படிப்பு?
சமஸ்க்ரிதம் படிச்சா அறிவாளியா? யோவ் 😃.
அதுக்கும் மேலே இந்த வர்க்க பிரிவு ,ஜாதிய பிரிவு ஆகியவற்றை அதிகமாக்க தான் நவீன கல்வி உபயோக படுகிறதே ஒழிய .அறிவில் தெளிந்தவர்களை ,மனிதம் பழகுபவர்களை எல்லாம் உருவாக்குவதில் எந்த ஆர்வமும் காட்டுவதில்லை.
நவீன தனியார் பள்ளிகள் தீண்டாமையின் ஆதி ஊற்றுக்கள்.

கருத்துகள் இல்லை: