வியாழன், 21 பிப்ரவரி, 2019

பங்களாதேஷ் . அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து .. 56 பேர் உயிரிழப்பு


தினத்தந்தி : வங்காளதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 56 பேர் பலியாகினர். டாக்கா, வங்காளதேச தலைநகர் டாக்காவின் பழமையான இடங்களில் ஒன்று சாவ்க்பஜார். இந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இரசாயன பண்டகசாலையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த பண்டகசாலையில் ஏற்பட்ட தீ விபத்து, மளமளவென பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி 56 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதால், மேலும் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கேஸ் சிலிண்டரில் தீ பற்றி இந்த விபத்து நிகழ்ந்து இருக்கக் கூடும் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக, கடந்த 2010 ஆம் ஆண்டு டாக்காவில் இதேபோன்று இரசாயன பண்டகசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 பேர் பலியாகினர்.

கருத்துகள் இல்லை: