புதன், 20 பிப்ரவரி, 2019

5ஆம் 8 ஆம் வகுப்புக்களுக்கு பொதுத்தேர்வு ... குலக்கல்விக்கு திட்டமிடும் பாஜகவின் அதிமுக

LR Jagadheesan : பலலட்சம் குழந்தைகளை ஒவ்வொரு ஆண்டும் நேரடியாக
பாதிக்கப்போகும் இந்த அறிவிப்பை தேர்தல் கூட்டணி பரபரப்புக்கு இடையே அதிகாரியை விட்டு வெளியிடும் கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் நரித்தனத்தை பார்த்து கொதிப்பதா?
இந்த அநியாயத்தேர்வை எழுதும் அரசுபள்ளி மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் இல்லை என்பதை ஏதோ அதிமுக அரசாங்கத்தின் ஆனப்பெரும் கருணையாக தலைப்பில் போட்டு ஜால்ரா அடிக்கும் ஊடகங்களின் கேவலத்தைக்கண்டு கோபப்படுவதா?
செங்கோட்டையன் எவ்வளவு படித்தார் என்று தெரியாது. ஆனால் அவரையும் அவருக்கு ஜால்ரா அடிக்கும் ஊடகபுலிகளையும் ஆண்டுதோறும் இந்த இரண்டு தேர்வுகளையும் கட்டாயம் எழுதச்செய்யவேண்டும். அப்போதுதான் இந்தமாதிரி  தேவையற்ற ஆணிகளை பிடுங்குவதை இவர்கள் நிறுத்துவார்கள்.
Saravanakumar Gopalan : இவரெல்லாம் கல்வி அமைச்சர்....வெட்கக்கேடு..... யார் அறிவுறுத்துவது.....யார் கேட்பது....காசுக்காக  எதையும் தின்ன துணிந்த கேவலம் .... மக்களின் நிலையை எண்ணி அழ வேண்டும்... மீண்டும் குரு குல கல்வி முறையை வேறு வடிவில் இந்த அரசாங்கம் காவி கும்பலின் அடியை வருடி மக்களின் நலனை சிறிதும் அக்கறையற்று செயல்படுகிறார்கள்
Ansar Ali : ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்போடு முடித்துக்கொண்டு அவரவர் தங்கள் குலத் தொழிலை செய்ய பணிக்கப்படுகின்றனர் பார்ப்பனீயத் தந்திரம்.
Pal Murukan A : விரும்பும் மாநிலங்கள் தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்பதுதான் திருத்த்கப்பட்ட சட்டம். தமிழகம் விரும்பாவிட்டால் நடத்தத் தேவை இல்லை. ஆனால் அதனை மறைத்து தேர்வு நடத்த முயற்சிக்கிறது தமிழக அரசு.

கருத்துகள் இல்லை: