திங்கள், 18 பிப்ரவரி, 2019

வைகோ : ஸ்டெர்லைட் ஆலை மூட உத்தரவு: என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்

ஸ்டெர்லைட் ஆலை மூட உத்தரவு: என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டிமாலைமலர் :  : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்று வைகோ தெரிவித்துள்ளார். தஞ்சாவூர்:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து நான் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தேன். இந்த வழக்கை நீதிபதிகள் நவீன், நாரிமன் ஆகியோர் விசாரித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை எதற்காக மூட வேண்டும் என்று என்னிடம் கேட்டனர். அதற்கு நான், தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை உருவாக்க கூடியது. இந்த ஆலை அருகில் வசிக்கும் பொதுமக்கள் நச்சுபுகையால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுற்றுச்சூழல் கடுமையாக மாசு அடைந்து வருகிறது. ஆலையில் இருந்து நச்சுபுகை வெளியேற 4 புகைபோக்கி குழாய்கள் இருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு புகைபோக்கி குழாய் தான் உள்ளது. இதற்கு மேல் என்ன காரணம் வேண்டும் என்று வாதாடினேன்.

இதற்கு நீதிபதிகள், இன்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட தீர்ப்பை ரத்து செய்து உள்ளனர். இது தூத்துக்குடி மட்டுமல்ல தமிழக மக்களுக்கே கிடைத்த வெற்றி ஆகும். இன்று தான் என் வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள் ஆகும்.
உண்மையான தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு நான் தலைவணங்குகிறேன். நீதி வென்றது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தீர்ப்புக்கு முன் மண்டியிட்டு உள்ளது.
அ.தி.மு.க. அரசின் இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வந்தது. ஏனென்றால் ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலியாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை மீது போடப்பட்ட வழக்கை அ.தி.மு.க. அரசு மூடி மறைத்தது. மேலும் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் சிந்திய ரத்தம், இந்த ஆலையை மூட வைத்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா குழுமம் வேறு எந்த கோர்ட்டுக்கு சென்றாலும் நாங்கள் விடமாட்டோம். தொடர்ந்து போராடி வெற்றி பெறுவோம்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம். அ.தி.மு.க. அரசு, காவல்துறையை ஏவி இந்த செயலில் ஈடுபட வைத்தது. பலியான 13 பேருக்கும் நெற்றிலும், மார்பிலும் குண்டுகள் துளைத்துள்ளது. இது கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100 நாள் போராட்டத்தின் போது கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள், வருவதற்கு முன்னரே போலீசாரால் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள் தான் வன்முறையில் ஈடுபட்டனர் என கூறி திசை திருப்பப்பட்டது. மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான வீடியோ காட்சிகள் அழிக்கப்பட்டன. துப்பாக்கி சூடு நடந்த அன்று இரவே நான் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்தேன். வேறு யாரும் அங்கு வரவில்லை. பொது மக்களுக்கு நான் தொடர்ந்து பாதுகாவலனாக இருப்பேன்.
சமூக போராளி முகிலன், கடந்த 15-ந் தேதி சென்னையில் இருந்து மதுரை ரெயிலில் ஏறினார். இரவு 1 மணி வரை அவரது செல்போன் உபயோகத்தில் இருந்தது. அதன்பின்னர் அவரது செல்போன் சுவிட்சு ஆப் ஆகி உள்ளது. தற்போது எங்கே இருக்கிறார்? என்று தெரிய வில்லை. ஒன்று அவர் சுட்டு கொல்லப்பட்டு இருப்பார். இல்லையென்றால் கடத்தப்பட்டு இருப்பார். இதற்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும், போலீசாரும் தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்கிய தீர்ப்பை வரவேற்கும் வகையில் வைகோ, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா

கருத்துகள் இல்லை: