புதன், 26 டிசம்பர், 2018

கனிமொழி மீது திருச்சி சிவா கோபம்? சமாதானப்படுத்திய ஸ்டாலின்?

  ‘கனி யாருனு நினைச்சீங்க?- சிவாவிடம்  கோபப்பட்ட ஸ்டாலின்மின்னம்பலம : டிசம்பர் 24 ஆம் தேதி திமுக தலைமை நிலையமான அறிவாலயத்தில் நடத்தப்பட்ட மாசெக்கள், எம்பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் தேர்தல் ஆலோசனைக்காக நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், எம்பியுமான திருச்சி சிவா சற்றே கோபமாகி பாதியிலேயே வெளியேறிவிட்டார் என்ற தகவல் திமுகவில் பரவி வருகிறது.
அவருக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதே இதன் காரணம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் பேச வாய்ப்பு அளிக்கப்படாததற்கு என்ன காரணம் என விசாரித்தால் விஷயம் டெல்லி வரை செல்கிறது.
“நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கஜா புயல் பற்றி தான் பேசுவதற்காக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் முன்கூட்டிய அனுமதி பெற்றிருக்கிறார் சிவா. இது தெரியாமல் கனிமொழியும் கஜா பற்றி பேச தயாராகிவிட்டார். கடைசிநேரத்தில்தா சிவா ஏற்கனவே அனுமதி கேட்டிருப்பது கனிமொழிக்குத் தெரிந்திருக்கிறது.

அப்போது, ‘நீங்க என்கிட்டையே முன்னாடியே சொல்லியிருக்கலாமே?’ என்று சிவாவிடம் கேட்டாராம் கனிமொழி. அதாவது மாநிலங்களவை திமுகவுக்கு கனிமொழிதான் தலைவர். அந்த தோரணையில் கேட்கவில்லை என்றாலும் சற்று பணிவாகத்தான் கேட்டிருக்கிறார் கனிமொழி. ஆனால் அதற்கு சிவா மிகவும் கோபமாகிவிட்டாராம்.
‘உங்ககிட்ட எல்லாத்தையும் கேக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை. நான் உங்களை விட சீனியர்’ என்று கனிமொழியிடம் எகிறிவிட்டாராம் சிவா. இதை கனிமொழி அப்படியே விட்டுவிட்டார்.

சில நாள்கள் கழித்து இந்தக் கூட்டத்துக்காக அறிவாலயம் வந்த சிவாவை தன் அறைக்கு அழைத்த தலைவர் ஸ்டாலின், ‘சிவாண்ணே கொஞ்சம் கோபத்தைக் குறைச்சுக்கங்க. எல்லா இடத்துலயும் கோபத்தைக் காட்டமுடியுமா? கனி யாருனு நினைச்சீங்க. அவங்க தலைவர் பொண்ணு’ என்று கோபமாகப் பேசியிருக்கிறார் ஸ்டாலின்.
இந்த பின்னணியில்தான் கூட்டத்தில் பேசவும் சிவாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாம். அதனாலேயே பாதியில் கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டார் திருச்சி சிவா”என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

கருத்துகள் இல்லை: