வியாழன், 27 டிசம்பர், 2018

தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம்! அடுத்தடுத்து இரண்டு பெண் அதிகாரிகள் கைது!

நக்கீரன் :கடலூர் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் தெய்வநாயகி. இவர் கடலூர்
முதுநகரை சேர்ந்த ஹவுஸ் அகமது என்பவரிடமிருந்து தாலிக்கு தங்கம் வழங்க ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதுகுறித்த புகாரின் பேரில் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் தெய்வநாயகியை கைது செய்தனர். இதேபோல் முட்லூரை சேர்ந்த ஷேக் அமீது என்பவரிடமிருந்து தாலிக்கு தங்கம் வழங்க ரூபாய் 3 ஆயிரம் லஞ்சமாக பெற்ற பரங்கிப்பேட்டை சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பானுமதி கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து இரண்டு பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: