![]() |
மின்னம்பலம் : , “ஒருசில நாட்களுக்கு முன்னாள் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வகித்து வந்த நீர்வளத் துறையை தவிர்த்து அவரிடம் இருந்த கனிம வளம் மற்றும் சுரங்கத் துறையை அமைச்சர் ரகுபதிக்கு மாற்றி கொடுத்துவிட்டு சட்டத்துறையை அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதலாக ஒதுக்கினார் முதல்வர் ஸ்டாலின்.
இப்போது கனிம வளம் மற்றும் சுரங்கத் துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சர் ரகுபதிக்கு பல சிக்கல்கள் அவரின் நட்பு வட்டாரங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் தொடர்வதாக தகவல்கள் வருகின்றன.
துரைமுருகனிடம் கனிம மற்றும் சுரங்கத் துறை கையில் இருந்த காலத்தில் எஸ்.ஆர் என்று அழைக்கக்கூடிய ராமச்சந்திரன், கரிகாலன், ரத்னம் இந்த மூன்றுபேர்தான் மணல் கான்ட்ராக்ட்டில் கொடிகட்டி பறந்தனர்.
இடையில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதால் அவர்கள் இதில் தலையிடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து புதுக்கோட்டைக்காரரான அமைச்சர் ரகுபதி தற்போது இந்த துறையை வகிப்பதால், அதே புதுக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் ரகுபதியை அணுகி மீண்டும் மணல் கான்டராக்ட் எடுக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார். இதற்காக, ஏற்கனவே மணல் காண்ட்ராக்ட் செய்துகொண்டிருந்த ராமச்சந்திரனுடைய பார்ட்னரான திமுகவை சேர்ந்த அறந்தாங்கி பரணி கார்த்திகேயனை அணுகி அமைச்சர் ரகுபதியிடம் பேச சொல்லியிருக்கிறார். digital thinnai : mkstalin action against durai murugan
அதன்படியே பரணி கார்த்திகேயனும் அமைச்சர் ரகுபதியை தொடர்புகொண்டு ராமச்சந்திரன் உங்களை சந்தித்து மணல் காண்ட்ராக்ட் பற்றி பேச விருப்பம் தெரிவித்துள்ளார் எப்போது சந்திக்கலாம் என்று கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் ரகுபதி ராமச்சந்திரன் குரூப்பிற்கு காண்ட்ராக்ட் கொடுக்க கூடாது என்று மேலிடம் தனக்கு உத்தரவிட்டிருக்கிறது. இந்த துறை தனக்கு ஒதுக்கும் முன்பே முதலமைச்சர் அலுவலகம் என்ன சொல்கிறதோ அதை மட்டும்தான் தான் செய்யவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
நாமக்கல்லை சேர்ந்த பொன்னர் மற்றும் சங்கர் சகோதரர்களுக்கு மட்டும்தான் சவுடு மற்றும் கிராவல் காண்ட்ராக்ட் கொடுக்கவேண்டுமென தனக்கு உத்தரவிடப்பட்டது என்று சொல்லி ராமச்சந்திரனை இது தொடர்பாக என்னை சந்திக்க அழைத்து வர வேண்டாமென அமைச்சர் ரகுபதி, பரணி கார்திகேயனிடம் சொல்லியிருக்கிறார்.
இந்த கனிமவள துறையை தனக்கு கொடுப்பதற்கு முன்னாள் ஒசூர் எம் எல் ஏ பிரகாஷை அமைச்சராக்கி அவரிடம்தான் இந்த துறையை கொடுக்க இருந்தனர். அதன் பிறகு என்னை அழைத்து இதை நிர்வகிக்க முடியுமா என முதல்வர் கேட்ட பொழுது நான் அதற்கு சம்மதம் தெரிவித்தன் பேரில்தான் சில கட்டுப்பாடுகளையும் விதித்து இந்த துறை என் வசம் வந்தது. ஆகவே தலைமையின் கட்டுப்பாட்டை மீறி என்னால் இதில் எந்த முடிவும் எடுக்க முடியாது என கறாராக கூறியுள்ளார்.
இதுபோன்ற சிக்கல்கள் எழலாம் என்று ஏற்கனவே அறிந்த தலைமை, மற்றுமொரு முக்கிய நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இந்த துறைக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பணியமர்த்தப்பட்ட துணை இயக்குனர்களில் ஒருவராகவும் அமைச்சர் துரைமுருகனுக்கு உதவியாளராகவும் இருந்த பெருமாள்ராஜாவை இடமாற்றம் செய்திருக்கிறது.
துரைமுருகனின் உதவியாளராக இருந்தபோதே அவர்தான் இந்த துறைக்கு அமைச்சர் போன்று செயல்படுவார். இந்த துறை சார்ந்த அனைத்தும் தமிழ்நாட்டில் அவர் அனுமதியோடுதான் நடக்கும். ஆகவே இவரை பயன்படுத்திக்கொள்ள ராமச்சந்திரனோ அல்லது வேறு யாரும் முயற்சிப்பர் என்ற காரணத்தால் அவரையும் இடமாற்றம் செய்தது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள துணை இயக்குனர்களையும் தலைமை தற்போது இடமாற்றம் செய்து வருகிறது.
கனிமவளத்துறையில் ஏற்கனவே இருக்கின்ற சிக்கல்கள் போதும் மேற்கொண்டு எந்த சிக்கலும் உருவாகிவிடக்கூடாது என்ற முனைப்பில் இன்னும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்ற மெசேஜை ஃபார்வோர்டு செய்துவிட்டு ஆப்லைன் போனது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக