![]() |
ராதா மனோகர் : அரபு நாடுகளில் உருக்குலைந்தவர்கள்
புலம் பெயர் நாடுகளில் வாழ்வை தொலைத்தவர்கள்
மற்றும் சுற்றுலா துறை மூலமும் நாட்டுக்குள் வருவதுதான் அந்நிய செலாவணி ( டாலர் பிராங் டோட்ச் மார்க் ரியால் போன்றவை)
இப்படி கடும் போராட்ட உழைப்பின் பயனாக நாட்டுக்குள் வருதுதான் அந்நிய செலவாணி!
இது எப்படி பெரிதும் வீணாக்க படுகிறது?
எப்படி இறக்குமதியாளர்கள் என்கின்ற மோசமான மாபியாக்களிடம் பறிபோகிறது?
உள்ளூர் உற்பத்திக்கு போட்டியாக இறக்குமதி செய்யப்படும் பல பொருட்கள் இந்த அந்நிய செலவாணி மூலம்தான் வாங்கப்படுகிறது.
ஒரு புறம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான அந்நிய செலாவணி பல இறக்குமதியாளர்களின் கைகளுக்கு போகிறது (அரசியல் வாதிகளின் இலஞ்சம் கமிஷன் உட்பட)
அந்த அந்நிய செலவாணியால் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் உள்நாட்டு உற்பத்திக்கு வேட்டும் வைத்திருக்கிறது.
ஒரே கல்லில் இரண்டு அக்கிரமம்!
உதாரணமாக முட்டை கோழி பால்மா மீன் போன்ற உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய கூடிய பொருட்களுக்கு போட்டியாக இதே பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது
அப்படி இறக்குமதியாகும் பொருட்களுக்கு அறவிடப்படும் சுங்க வரியை ஒரு வருமானமாக காட்டும் மோசடியும் நடக்கிறது
சுங்கவரி என்பது நாட்டின் உற்பத்தியா?
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த இறக்குமதியாளர்கள் என்ற மாபியாக்களின் கைகளில் தான் நாடு இருக்கிறது!
எல்லா அரசியல்வாதிகளின் நட்பும் இந்த இறக்குமதி கொள்ளையர்களோடுதான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக