சனி, 9 ஏப்ரல், 2016

JNU ஷேஹ்லா ரஷீத் மதுரையில் : மோடி அரசு பல்கலை கழகங்கள் ,புத்தி ஜீவிகள் மீது தாக்குதல்....பிஜேபி எம்பி மல்லியா ஓடியது ரகசியமாகவா?



நேர்மையான அரசைத் தேர்வு செய்ய மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மதுரையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் துணைத்தலைவர் வலியுறுத்தினார். அகில இந்திய மாணவர் கழகம் சார்பில் தேச பக்தி-தேசத் துரோகம் என்ற தலைப்பில் மதுரை இறையியல் கல்லூரி வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், அகில இந்திய பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகி விவேகானந்தன் தலைமை வகித்தார். இதில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் துணைத் தலைவர் ஷெஹ்லா ரஷீத் பேசியது: தேசியம் எனும் கொள்கை ஜெர்மனி நாட்டில் ஆரம்பித்து மெல்ல மெல்ல ஆசிய நாடுகளுக்குள் பரவியது. இந்தியாவில் தற்போது தீவிரமாக வளர்ந்துள்ளது.
இது நாட்டு மக்களுக்கு எவ்விதத்திலும் நன்மையை உண்டாக்காது. தேச நலன் எனும் போர்வையில் கல்வி நிலையங்களுக்குள் மதத்தைப் பரப்புவதை எந்தக் காலத்திலும் ஏற்க முடியாது. மதம் என்பது நாட்டுக்கு வேண்டுமானால் ஏதாவதொரு வகையில் நன்மையை உண்டாக்கலாம். ஆனால், பல தரப்பட்ட மாணவர்கள் பயிலும் கல்வி நிலையங்களில் மாணவர்களிடையே விரோதப் போக்கை ஏற்படுத்தும். இதற்கு சமீபத்திய உதாரணம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம். மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசு, ஜனநாயகத்தை மட்டுமே பின்பற்றும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. எனவே நேர்மையான அரசை தேர்வு செய்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.தினமணி.com

கருத்துகள் இல்லை: