வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

முதல்வர் ஜெயலலிதா : அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம்

சென்னை,:''கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, அளித்த வாக்குறுதிகளுக்கும் மேலாக, பல நல திட்டங்களை, அ.தி.மு.க., அரசு நிறைவேற்றி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.சட்டசபையில், 110வது விதியின் கீழ், நேற்று அவர் பேசியதாவது: கடந்த, 2011 சட்டசபை தேர்தலின் போது, 'அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மக்கள் நலன் காக்க, எவ்வாறெல்லாம் செயல்படும்' என, தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டு
இருந்தோம்.  Natarajan Ramanathan : நான் சமீபத்தில் தமிழ் நாட்டின் சில பகுதிகளுக்கு சொந்த வேலையாக சென்றுவந்தேன். அனைத்து இடங்களிலும் பெருவாரியாக மக்கள் மீண்டும் அதிமுகவே ஆட்சிக்கு வரும் என்று திடமாக நம்புகிறார்கள். ஒரு இடத்தில்கூட திமுக வரலாம் என்றுகூட யாருமே சொல்லவில்லை. ஆனால் இப்போது இருக்கும் அளவு MLA மீண்டும் கிடைக்க வாய்ப்பு குறைவு. ஆச்சரியமாக BJP க்கு செல்வாக்கு அதிகரித்து உள்ளதை அறியமுடிந்தது....நெசமாலுமா? 


*தமிழகம் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் பீடு நடை போட நடவடிக்கை எடுக்கப்படும்
*கல்வி, மருத்துவம், விவசாயம், நதி நீர், அடிப்படை கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்
* இளைஞர்கள், இளம்பெண்கள் தலை நிமிர்ந்து சொந்த காலில் நிற்க, வழி உருவாக்கப்படும் என, எங்கள் லட்சியத்தை குறிப்பிட்டு இருந்தோம். இந்த லட்சியத்தை எட்ட, துறைதோறும் எடுக்க உள்ள நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிட்டு இருந்தோம்
* முதன்மை துறை, உற்பத்தி துறை மற்றும் சேவை துறை ஆகியவை எவ்வாறு மேம்படுத்தப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தோம்

*மாணவர், தொழிலாளர், விவசாயி, மீனவர், இளைஞர், பெண்கள், முதியோர், ஆதரவற்றோர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்பட்டோர், சிறுபான்மையினர் என, ஒவ்வொரு பிரிவினருக்கும் செயல்படுத்தும் திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்து இருந்தோம். தற்போது, மூத்த குடிமக்களுக்கு கட்டணமின்றி பஸ் பயணம் திட்டத்தை அறிவித்ததன் மூலம், 2011 தேர்தலில், அ.தி.மு.க., அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு உள்ளன என்பதை, பெருமையோடு தெரிவிக்கிறேன். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளுக்கும் மேலாக, பல நல திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளோம் என, மகிழ்ச்சியோடு கூறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். தினமலர்.com

கருத்துகள் இல்லை: