சனி, 20 பிப்ரவரி, 2016

பொன்.ராதாகிருஷ்ணன்: கடலில் மூழ்கும் கப்பலுக்கு கப்டன்......? விஜயகாந்தை விட ஜெயலலிதாவே பெட்டர்?

கடலில் மூழ்கும் கப்பலுக்கு கேப்டன் செல்வாரா என கேள்வி எழுப்பினர் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன்.
சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியாவில் தயாரிப்போம் என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் கூட்டணி அமைத்தே தேர்தலை;க் சந்திக்கவிருக்கின்றன.
எந்தக் கட்சிக்கும் தனியே போட்டியிட விருப்பமில்லை. பாரதீய ஜனதா கட்சியும் தமிழக தேர்தலில் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடும். விஜயகாந்த் நடத்தும் கட்சி மாநாட்டிற்கு எனது வாழ்த்துக்கள். திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இக்கூட்டணி கடலில் மூழ்கும் கப்பலைப் போன்றது. இந்த கப்பலுக்கு கேப்டன் (விஜயகாந்த்) செல்வாரா?. பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார் அமைச்சர்  தினமணி.com

கருத்துகள் இல்லை: