சனி, 26 மார்ச், 2016

அதிமுகவின் பி டீமுக்கு 1,500 கோடி பேரமா? டிவி பேட்டியில் பாதியில் எழுந்துபோன வைகோ...WHY?


Did AIADMK gave 1500 crores for your team?' Vaiko walks out in a TV interview
சமூக வலைதளங்களில் வெளியான செய்தி பற்றி வைகோவிடம் கேள்வி கேட்கப்பட்டது. ;அதற்கு வைகோ நேர்காணலை பாதியில் ரத்து செய்துவிட்டு வெளியேறிச்சென்றார்.தே.மு.தி.க.வுக்கு தி.மு.க ரூ.500 கோடியும் 80 தொகுதிகளும் கொடுப்பதாக பேரம் பேசியது என மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கூறியிருந்தார்.  இது தொடர்பாக வைகோவுக்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதை நான் சட்டப்படி சந்திப்பேன் என வைகோவும் கூறியிருக்கிறார். நாங்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் திமுக இதை திரும்ப பெற்றுவிடவேண்டும் என்று ஆவேசப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் பாலிமர் செய்திதொலைக்காட்சிக்கு வைகோ பேட்டி அளித்தபோது’தி.மு.க தரப்பில் ரூ.500 கோடி கொடுக்க முன்வந்தார்கள்...80 இடங்கள் கொடுக்க முன்வந்தார்கள் என்கிறது உங்களது குற்றச்சாட்டு. அது தவறு. அதுமட்டுமல்ல அதிமுகவின் பி டீமாக செயல்படுகிற வைகோ அவர்கள் தலைமையில் இயங்குகிற அந்த அமைப்புக்கு ரூ1,500 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது.......’’ என்று செய்தியாளர் கேள்வியை கேட்டு முடிப்பதற்குள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  பேட்டியை பாதியில் முடித்து காலர் மைக்கை கழற்றி போட்டுவிட்டு வெளியேறி சென்றார்.நான் அடுத்து என்ன சொல்ல வர்றேன்னு கொஞ்சம் கேளுங்க கேளுங்க என்று செய்தியாளர்கள் சொல்லச் சொல்ல வைகோ அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் அறையை விட்டு வெளியேறினார்.  nakkheeran,in

கருத்துகள் இல்லை: