
இன்றும் பாலமேட்டில் காலை மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருப்பு சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கண்டன பேரணி நடத்தினார்கள். இந்நிலையில் பாலமேடு அருகே உள்ள ராஜா கல்பட்டியில் வட மஞ்சு விரட்டு போட்டி நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது கிராம மக்கள் காளைகளை அவிழ்த்து விட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காளைகள் அவிழ்த்து விடப்படுவதை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய விளையட்டான ஜல்லிக்கட்டுக்கு இந்தாண்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளது மதுரை, அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுர் உள்ளிட்ட கிராம மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
://tamil.oneindia.com/n
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக