திங்கள், 11 ஜனவரி, 2016

இந்தியா உலகுக்கு வாரி வழங்கியது ஆன்மிகம்; மதவாதம் அல்ல,'' பிரதமர் நரேந்திர மோடி

மும்பை,இந்தியா, உலகுக்கு வாரி வழங்கியது ஆன்மிகம்; மதவாதம் அல்ல,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.மும்பையில் நேற்று நடந்த, ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், 'வீடியோ கான்பரன்சிங்' முறையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:பண்டைய காலத்தில், நம் நாட்டின் துறவிகளும்,முனிவர்களும், உலகுக்கு வாரி வழங்கியது, ஆன்மிகத்தை; மதவாதத்தை அல்ல. இனப் பிரிவுகள், சில சமயம் பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். மாறாக ஆன்மிகம், அப்பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும். மறைந்த முன்னாள் ஜனாதிபதிஅப்துல் கலாம், இந்தியாவின் ஆன்மிகத் தன்மையில், நம்பிக்கை உள்ளவர். 'மனித இனத்தை, ஆன்மிகப்படுத்துவ தால், மனிதர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்' என, அப்துல் கலாம் கூறினார். எல்லா மதங்களையும் விட, தேசிய மதமே சிறந்தது. இந்தியாவின் பாரம்பரியம், உலகில் சிறப்புத் தன்மை வாய்ந்தது. இவ்வாறு மோடி பேசினார். தினமலர்.com

கருத்துகள் இல்லை: