புதன், 14 அக்டோபர், 2015

இளையராஜாவுக்கு புரியாத தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே....


அர்த்தம் இல்லாத பாடல் வரிகளை கூட  இசை அமைப்பாளர்கள் அர்த்தம் உடையதாக ஆக்கி விடுகிறார்கள் என்று இளையராஜா கூறியுள்ளார்
அதற்கு உதாரணமாக   நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் "தாமைரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் என்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
அதையே MSV அவர்களின் இசையில் எவ்வளவு அர்த்தம் உள்ளதாக தெரிகிறது என்று  இளையராஜா ஒரு மேடையில் கூறியுள்ளார். கவிஞர்கண்ணதாசனை எவ்வளவு குறைவாக இந்த  ராகதேவன் எடைபோட்டுவிட்டார்?
தாமரை மலருக்கு பதிலாக தாழம்பூவில் என்று எழுத கண்ணதாசனுக்கு தெரியாதா?
தாமரையின் தனி குணம் அது தண்ணீரில் இருந்தாலும் தண்ணீரோடு ஒட்டாது என்பதுதான் .
அதுபோலவே இந்த உலகத்தில்  இருந்தாலும் அதனோடு ஒட்டாமல் தன்மனதை தனியே வைத்திருந்தேன் என்று கதாநாயகி குறிப்பிடுவதாக அந்த அர்த்தம் உள்ளது.
நெஞ்சம் மறப்பதில்லை கதாநாயகி பூர்வ ஜென்ம காதலில் மனதை பறிகொடுத்து இந்த ஜென்மத்திலும் இங்கு ஓட்டமுடியாமல் தன்மானத்தை மட்டும் போனஜென்ம நினைவிலேயே வைத்திருக்கிறாள் என்று அற்புதமாக கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கம்போல மேடை நாகரீகம் இன்றி வாயில் வந்ததை வாந்தி எடுத்துள்ளார் இளையராஜா . 

6 கருத்துகள்:

Dr.Balan சொன்னது…

Raja vomitted the issue which he is having with vairamuthu and other poets. I can enjoy vsiramuthu lyrics and feel it. KANNADADAN IS NOT JUST A LYRISTS TO WRITE ANYTHING MEANINGLESS. SO...YOU ...RAJA...GO AND LEARN TAMIL FIRST. BETTER LEARN IT FROM MSV WHO IS MAKAYALI BY BIRTH. SHAME THAT YOU ARE SOMETIME TALKING NONDENCES. GO AND FIND IN TAMIL BOOKS ABOUT WATER AND LOTUS RELATIONS.

Tomtomjf சொன்னது…

எகிப்து நாட்டின் பழமை நம்பிக்கையின்படி தாமரை மலர் மறுபிறவியை குறிக்கும். இந்து மதத்தில் அது இறவாமை அதாவது நிரந்தரத்தை குறிக்கும். படத்தின் மறு பிறப்பு கதயை கருத்தில் கொண்டே தாமைர மலர் உவமையை கவிஞர் கண்ணதாசன் கையாண்டிருக்கின்றார். இளயராஜாவின் அறியாமை சற்று வருந்தத்தக்கது. Check Lotus symbolism

எம்.முரளி சொன்னது…

வரிகள் பாடலில் புரிந்து கொள்வது கடினம்.. ஆனால் இசை அதன் தேவையை குறைந்து விடுகிறது..

அதைத்தான் சொல்கிறார் என நினைக்கிறேன்

Muralidharan Ramarao சொன்னது…

நீங்கள் சொல்வது சரி.கவியரசு கண்ணதாசனை அவ்வளவு சாதாரணமாக நினைத்து விட்டாரே என்று வருத்தமாக இருக்கிறது

RADHA சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
RADHA சொன்னது…

Superb.