செவ்வாய், 13 அக்டோபர், 2015

பிரபஞ்சம்/கடவுள்/ஆத்மா! அதை பற்றி எங்களுக்கு என்னதான் தெரியும்? What the bleep do we know?

இந்தப்படம் மிகவும் சவாலான கற்பனையும் கலையும் சேர்ந்த விவரண படமாகும்.
ஏராளமான விமர்சனங்களையும் அதற்கு நிகரான பாராட்டுக்களையும் பெற்று  வசூலிலும் வெற்றி பெற்ற ஒரு அதிசய படமாகும்.
விஞ்ஞானிகளின் கடுமையான விமர்சனம் அதே சமயம் பாராட்டுகள் என்று இரண்டு விதமான கருத்துக்களும் இருந்தாலும் பார்வையாளர்களின்
கோணத்தில் இது ஒரு பெரும் சேவையை செய்த படம் என்று இதை கூறலாம்.
Quantum Science or Quantum Mechanics என்று படித்தவர்களாலேயே  விளங்க முடியாத ஒரு விடயத்தை சாதாரண சினிமா ரசிகர்களுக்கும் விளங்க வைக்கும் முயற்சியை இது செய்தது,
பிரபஞ்சம் அல்லது கடவுள் போன்ற பதில் காண முடியாத கேள்விகள் ஒரு பெண்ணின் மனதில் அலைமோதியது.
அவரோ காது கேளாதவர் அவரின் மௌன உலகத்தில் நாம் சாதரணமாக காணும் காட்சிகள் அவருக்கு கொஞ்சம் வித்தியசாமாக தோன்றியதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.
நாம் காணும் காட்சிகள் உண்மையில் அங்கு நிதர்சனமாக உள்ள காட்சிகள்தானா?
காணும் காட்சிகள் நாம் காண்பதாலேயே அவை காட்சிகள் ஆகின்றனவா? உண்மையில் அங்கு ஒன்றுமே இல்லையா?
இது போன்ற கேள்விகள் உங்கள் தலையை சுற்ற செய்யும்.
அழகான இந்த பிரபஞ்சம் அழகாக இருப்பதற்கும் அல்லது அழகில்லாமல் இருபதற்கும் அதை பார்க்கும் நாம் தான் காரணமா?

 இவையெல்லாம் வெறும் அறிவியல் கேள்விகளும் அதற்கு பதில் தேடும் முயற்சிகளும் ஆகும்,
ஆனால் இந்த அறிவியல் சமாசாரங்களை அழகான ஒரு திரைப்படமாக படம் பிடித்து காட்டுவது சாதாரண விடயம் அல்ல.
உங்கள் எண்ணங்கள் தான் பௌதீக ரகசியம் என்ற கருத்தை கற்பனை கதா பாத்திரங்கள் காட்சிகள்  மூலம் ஒரு கவிதையாக காட்டிஉள்ளார்கள்.
செவிப்புலன் அற்ற  ஒரு பெண்  படப்பிடிப்பாளர் கதையை எடுத்து செல்கிறார்.
அவர் காணும் இந்த பிரபஞ்சதின்  அழகு  ஏன்  நமக்கு தெரிவது இல்லை?
அவரின் பார்வையில் உள்ள  விஷேச தன்மைதான் என்ன?
இன்னும் என்னனவோ விடயங்களை விளங்க வைக்கும் பெரிய முயற்சியை இத்திரைப்படம் முன்னெடுத்திருக்கிறது..
நாம் யார்? எங்கே போகிறோம்? என்பது பற்றியெல்லாம் எமது விடை காண முடியாத கேள்விகளுக்கு எல்லாம் பதிலாக புதிய புதிய கேள்விகளை கேட்டு எமது அறிவுக்கு அசல் தீனியை இத்திரைப்படம் தந்திருக்கிறது.
நிச்சயம் பார்க்க வேண்டிய படம். cinepass.blogspot.com

கருத்துகள் இல்லை: