நாட்டின் சட்டத்துறை-நீதித்துறை மாணவர்கள் ஜெயலலிதாவின்   தங்க-
வைர நகைகளை அணிந்து கொண்டு அலங்காரப் பதுமைகளாக “போஸ்” கொடுக்கும் ஜெயா-சசிகலா. அடித்த கொள்ளைக்கு ஆதாரபூர்வமான சான்று!
 கிரிமினல் சட்ட சாகசங்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன. அவை சட்டப் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக்கு வைக்கத் தகுந்தன. இந்த உண்மையை சட்ட – நீதி வல்லுநர்கள் எப்படிக் கவனிக்கத் தவறினர் என்பது வியப்பாகவே இருக்கிறது!பெங்களூருவில் நடந்து வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்தடுத்துப் பல வினோதங்கள்! வழக்கை “நடத்தும்” அரசுத் தரப்பின் கண்களில் இவ்வளவு காலமும் விரல்விட்டு ஆட்டிவந்த ஜெயலலிதா தரப்பினர் இப்போது திருட்டு “முழிமுழிக்கின்றனர்.” காரணம், அவர்கள் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கைப் பிடித்து விட்டதுதான்!