வியாழன், 13 மார்ச், 2014

விஜயகாந்த் : தே.மு.தி.க., கூட்டணியால் கருணாநிதி, ஜெ.,க்கு பயம்: ! உன்னைய பாத்து உன் வேட்பாளரே பயப் படுரான்ல நீதான் குட்டுவியே !

பா.ஜ., தே.மு.தி.க., கூட்டணியை பார்த்து, ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் பயம் வந்து விட்டது. அதனால், மாற்றி, மாற்றி பேசுகின்றனர்,'' என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் கூறினார்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், நாளை தேர்தல் பிரசாரம் துவக்குகிறார். விஜயகாந்த் பிரசாரத்திற்கு வரும்போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும், தே.மு.தி.க., மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த, தே.மு.தி.க., நிர்வாகிகளுக்கு நேற்று ஆலோசனை வழங்கப்பட்டது. பின்னர், விஜயகாந்த் பேசியதாவது: பா.ஜ., - தே.மு.தி.க., கூட்டணியை பார்த்து, முதல்வர் ஜெயலலிதாவிற்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கும் பயம் வந்துவிட்டது.  ஒரு பக்கம் சொர்ணாக்கா மறுபக்கம் புல் டண்டனக்கா 
ஜெயலலிதா பிரசாரத்தை துவக்கும் முன்வரை, பிரதமர் கோஷத்தை எழுப்பி வந்தார். ஆனால், முதல் நாள் பிரசாரத்திலேயே, 'அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் அரசு, மத்தியில் அமைய வேண்டும்' என்றார். இப்போது, அ.தி.மு.க., கைகாட்டுபவரே பிரதமராக அமர முடியும் என்கிறார். அதேபோல, கருணாநிதி, 'மோடி என் நண்பர் என்றும், அவர் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றுகிறார்' என்றும் கூறினார். இப்போது, மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்கிறார். அவரது கூட்டணியிலேயே, இரண்டு மதவாதகட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதை மறந்துவிட்டு பேசுகிறார். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சேர்ந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். அனைத்து கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காகவும், நாம் பாடுபடவேண்டும். ஸ்டாலினுக்கும், தே.மு.தி.க., பா.ஜ., கூட்டணியை பார்த்து பயம் வந்துவிட்டது. நம் கூட்டணியை பிரிக்க அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் இணைந்து தீவிரமாக பணியாற்றுகின்றனர்; அவர்களின் முயற்சி பலிக்காது. இவ்வாறு, விஜயகாந்த் பேசினார்.

- நமது நிருபர் - 

கருத்துகள் இல்லை: