
தனது வெற்றி வாய்ப்பை இழக்கபோவதாக இப்போதே புலம்ப தொடங்கி விட்டது
70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக டிசம்பர்

ஆனால் இதுகுறித்து அறிந்த டெல்லி பாரதீய ஜனதா தலைவர் விஜய் கோயல் கூட்டத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். "என்னை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்காவிட்டால் கட்சிப்பதவியை ராஜினாமா செய்து விடுவேன்" என கூறி மிரட்டல் விடுத்ததாகவும், தொடர்ந்து அவர் கூட்டத்தில் இருந்தே வெளிநடப்பு செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதைமீறி வேறு ஒருவரை பாரதீய ஜனதா முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்தால், விஜய் கோயல் வெளிப்படையாக போர்க்கொடி உயர்த்துவார், அது கட்சியில் பிளவை உண்டாக்கும், அத்துடன் பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராகவும் தாக்கத்தை உண்டாக்கலாம் என்ற கருத்து வெளிப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து இந்த தருணத்தில், கட்சியில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படாமல் காத்துக்கொள்ளும் வகையில், டெல்லி சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி வேட்பாளராக யாரையும் முன்னிலைப்படுத்துவதில்லை என பாரதீய ஜனதா பிரசாரக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக