வெள்ளி, 4 ஜனவரி, 2013

அழகிரி ஆவேசம் ! திமுக ஒன்றும் மடம் இல்லை

வேலூர் மாவட்ட பாமக முன்னாள் செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கலைஞர் நேற்று (3.1.2013) முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலைஞர் பேசியபோது,’இந்தச் சமுதாய மேன்மைக்காக, என் ஆயுள் இருக்கும்வரை பாடுபடுவேன். அப்படியானால் அதற்குப் பிறகு என்ற கேள்விக்குப் பதில்தான் ஸ்டாலின். அவரை நீங்கள் மறந்து விடக்கூடாது’’ என்றார்.தனக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பார் என்று அறிவித்ததால்,  கட்சியில் ஒரு தரப்பினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையம் வந்திறங்கிய மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் செய்தியாளர்கள்,  தனக்குப் பின் மு.க.ஸ்டாலின் என்று கலைஞர் கூறியுள்ளாரே என்று  கேட்டதற்கு, ‘’தி.மு.க. ஒன்றும் திறந்த மடம் இல்லை’’ என்று  ஆவேசமாக கூறினார்.&அவர் மேலும்,  திமுக ஒன்றும் திறந்த மடம் அல்ல என்று கலைஞரே முன்பொரு முறை கூறியுள்ளார் என குறிப்பிட்டார்<

கருத்துகள் இல்லை: