செவ்வாய், 1 ஜனவரி, 2013

போலீசார் பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்

 பாலியல் தொந்தரவு: புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை: போலீஸ் மீது குற்றச்சாட்டு
பெண்களுக்கு தொடர்ந்து பா-யல் தொந்தரவு தரும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மகளிர் அமைப்பினர் 31.12.2012 திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்யும் நபர்கள் குறித்து காவல்துறையினரிடம் புகார்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குற்றம் சாட்டினர்

கருத்துகள் இல்லை: