வியாழன், 3 ஜனவரி, 2013

டெல்லி மாணவியை அதிகம் கொடுமை படுத்தியது 17 வயது மைனர்தான் விசாரணையில் தெரியவந்துள்ளது

டெல்லியில் ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 6 குற்றவாளிகளில் பெயர் வெளியிடப்படாத 17 வயது மைனர் பையன் தான் அதிக பட்ச குற்றம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. கல்லூரி மாணவியும் அவரது நண்பரும் கடந்த 16ம் தேதி இரவு பஸ்சில் ஏறியதும் அந்த மைனர் பையன் முதலில் கிண்டல் செய்துள்ளான். அதனைத் தொடர்ந்து தான் மாணவியின் நண்பருக்கும், 6பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது டிரைவர் ராம்சிங் கம்பியை எடுத்து மாணவியின் நண்பரை சரமாரியாக தாக்கியுள்ளார். அதை தடுத்த மாணவியையும் இரக்கமின்றி தாக்கியதால் மாணவி அந்த வாலிபர்களை கடுமையாக திட்டியுள்ளார். ராம்சிங்கிற்கு இதை கேட்டதும் ஆத்திரமடைந்துஉனக்கு பாடம் கற்பிக்கிறேன் பார் என்று மாணவியை பலாத்காரம் செய்துள்ளான். அவனது வெறிச்செயல் அடங்கியதும் 17 வயதுடைய மைனர் பையன் அந்த மாணவியையும் இரக்கமின்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதற்கு பிறகு அக்ஷய் என்பவன் மாணவியை சூரையாடியுள்ளான். ஓடும் பஸ்சில் சுமார் 30 நிமிடங்கள் அந்த மிருகங்களிடம் இருந்து சிக்கி மாணவி போராடியுள்ளார். 3 வாலிபர்களும் ஒன்று சேர்ந்து செய்த கொடூரத்தின் உச்சமாக மாணவி மயங்கி விழுந்தார். மாணவி மயங்கி விழுந்த பிறகு ராம்சிங்கும், அக்ஷயும் அங்கிருந்து நகர்ந்து விட்டனர். ஆனால் அந்த மைனர் 17 வயது பையன் மட்டுமே மீண்டும் காம கொடூரத்தில் ஈடுபட்டுள்ளான். அவனால் தான் மாணவி நிதானமிழந்து ஆழ்ந்த மயக்க நிலைக்கு தள்ளப்பட்டாள். இது மட்டுமின்றி வயற்றிலும் அவன் தாக்கியுள்ளான். மாணவியின் சிறுகுடல் காயம் ஏற்படுவதற்கு இவனே காரணம் என்று தெரிய வந்துள்ளது. இவ்வளவு அட்டூழியத்தையும் செய்துவிட்டுஅவன் மைனர் பையன் என்ற போர்வையில் தப்ப நினைக்கிறான். அவனை தப்பவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவன் உண்மையான வயதைகண்டுபிடிக்க போலீசார் எலும்பு சோதனை நடத்தியுள்ளனர். பிடிபட்ட 6 பேரில் அந்த மைனர் பையன் தான் மிகக்கொடூரமான முறையில் அந்த மாணவியை பலாத்காரம் செய்ததாக விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன thinaboomi.com

கருத்துகள் இல்லை: