திங்கள், 24 டிசம்பர், 2012

லாலு பிரசாத் யாதவ் : கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை


Delhi மாணவி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, இதுபோன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவும் இணைந்துள்ளார். பீகாரில் லாலு பிரசாத் யாதவ், இன்று நிருபர்களிடம் கூறியதவாது:பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு சட்டப்படி வழங்கும் குறைந்தபட்ச தண்டனையான 7 ஆண்டுகள் என்பது போதாது. இதுபோன்ற பாலியல் அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமானால், ஏற்கனவே உள்ள சட்டங்களில் திருத்தம் செய்யப்படவேண்டும்.டெல்லியில் மாணவி பாலியல் பலாத்கார சங்பவம் குறித்து பாராளுமன்றதில் விவாதத்திற்கு வரும்போது, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் வலியுறுத்தும். பீகார் மற்றும் கர்நாடகாவில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான குற்றங்களை தடுக்க கடுமையான சட்டம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: