வியாழன், 27 டிசம்பர், 2012

Again டெல்லியில் கற்பழித்து தெருவில் வீசிய கொடுமை

டெல்லியில் நேற்றிரவு மூன்று பேர் கொண்ட கும்பல் ஒ‌ன்ற 42 வயதுடைபெண்ணை கொடூரமாக கற்பழித்து தெருவில் வீசிய அர‌ங்கே‌றியு‌ள்ளத வி‌ரிந்தாவன் என்னும் இடத்திலிருந்து வீடு திரும்ப கொண்டிருந்த 42 வயதுடைய பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து மூன்று பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கற்பழித்திருப்பது தெரியவந்துள்ளது.இன்று காலை டெல்லி கல்காஜி பகுதியில் உ‌ள்ள தெருவில் மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.பாலியல் வன்முறையில் ஈடுபட்ட மூவரில் ஒருவரான திலிப் வர்மா, கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 வருடங்களாக தெரிந்தவர். அதனால் அப்பெண் திலிப் வர்மாவுடன் காரில் வீடு திரும்பியுள்ளார்.வழியில் இவர்களுடன் திலிப் வர்மாவின் வேறு 2 நண்பர்கள் காரில் ஏறிக்கொண்டனர். சிறிது நேரம் கழித்து பெண்ணுக்கு மயக்கமருந்து கொடுத்து காரில் இருந்த மூவரும் அப்பெண்ணை கற்பழித்திருக்கிறார்கள்.இது குறித்து போலீசார் கூறுகை‌யி‌ல், பாதிக்கப்பட்ட பெண் எ‌ய்‌ம்‌ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பாலியல் வன்முறையில் ஈடுபட்ட திலிப் வர்மாவை கைது செய்திருப்பதாகவும், தலைமறைவாக இருக்கும் அவரின் 2 நண்பர்களை ‌பிடி‌க்க 3 தனிப்படைகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.<மருத்துவ மாணவி கற்பழிப்‌பி‌ன் தாக்கம் அடங்குவதற்கு முன்பே டெல்லியில் தொடர்ந்து கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: