செவ்வாய், 25 டிசம்பர், 2012

Bus Rape Case போலீஸ் குறுக்கீடு நீதிபதி குற்றச்சாட்டு

டெல்லி பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பெற சென்ற சப் டிவிசனல் நீதிபதி உஷா சதுர்வேதி முன்று உயர் போலீஸ் அதிகாரிகளால் கடமை செய்ய விடாமல் தடுத்த சம்பவம் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்த போலீஸ் உயர் அதிகாரிகள் தாங்கள் தயாரித்து வைத்திருந்த கேள்விகளையே கேட்குமாறு நீதிபதியை வற்புறுத்தியதாக தெரிய வருகிறது . மேலும் பெண்ணின் பெற்றோரின் அனுமதி பெறாமலேயே போலீஸ் வீடியோ எடுத்தும் உள்ளது .இது பற்றி முதல்வர் ஷீலா தீசிதிற்கு உஷா சதுர்வேதி கடிதம் எழுதியுள்ளார் . இந்த கடிதம் எப்படி மீடியாக்களுக்கு தெரியவந்தது என்றும் உள்துறை அமைச்சு  விசாரணை செய்ய உள்ளது . , குற்றவாளிகளின் பின்னணியில் பெரும் மனிதர்கள் யாரவது சம்பந்தப்பட்டு உள்ளார்களோ என்ற சந்தேகம் உருவாக்கி உள்ளது     

கருத்துகள் இல்லை: