
இந்நிலையில், கோராபுட் மாவட்டத்தில் நாராயண் பட்டணம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில், மாவோயிஸ்ட்களின், "மக்கள் கோர்ட்' நேற்று கூடிய போது, அதன்முன், ஜினா ஹிகாகா ஆஜர்ப்படுத்தப்பட்டதாக, மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக வழக்குகளை நடத்தி வரும் வழக்கறிஞர் நிஹார் ரஞ்சன் கூறினார். "மக்கள் கோர்ட்' நடவடிக்கைகள் எப்போது முடியும், கோர்ட்டில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்பது குறித்து தன்னால் எதுவும் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அதனால், எம்.எல்.ஏ., வின் கதி என்னவாகுமோ என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில், ஜினா ஹிகாகாவை விடுவிக்கும்படி, மாவோயிஸ்ட்களுக்கு மீண்டும் ஒரு முறை முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக