வியாழன், 19 ஏப்ரல், 2012

அர்ச்சகர் தேவநாதன் வழக்கு விசாரணை வருகிறது

ஸ்ரீபெரும்புதூர், ஏப். 19- காஞ்சீபுரம்  அர்ச்சகர் தேவநாதன் வழக்கு மே மாதம் 16-ஆம் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
காஞ்சீபுரம் அடுத்த பழைய சீவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவநாதன் (35). இவர் காஞ்சீபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக இருந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கருவறையில் பல பெண்களிடம் பாலியல் செயலில் ஈடுபட்டார். இதை தன் செல்போன் மூலம் படம் பிடித்து ரகசியமாக பார்த்து ரசித்து வந்தார்.
இந்த ஆபாச படம் பலரது செல்போனுக்கு பரவியது. இதயடுத்து சிவகாஞ்சி காவல்துறையினர் கருவறை நாயகன் அர்ச்சகர் தேவநாதன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். தலைமறைவான தேவநாதன் காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவல்துறையினர் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போது கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களை பேச்சின் ஜாலத்தில் மயக்கி முக்கிய பெண் வி.அய்.பி.களுடன் கோவில் கருவறையில் அர்ச்சகர் தேவநாதன் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. இதில் சம்பந்தப்பட்ட 4 பெண்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர்.

கோவிலுக்குச் சென்ற போது அர்ச்சகர் தேவநாதன் மயக்க சாக்லெட் கொடுத்து கருவறைக்குள் அழைத்து சென்று உறவு வைத்தார். இதனை செல்போனில் படம் பிடித்து அதை காட்டி மிரட்டி அடிக்கடி கோவில் கருவறையில் பாலியல் செயலில் ஈடுபட்டார் என காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

அர்ச்சகர் தேவநாதன் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். அவரை எந்தக் கோவிலிலும் அர்ச்சனை செய்யக்கூடாது என கூறப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் இருந்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த நீதிமன்றத்தில் கடந்த 10 மாதங்களாக நீதிபதி இல்லாததால்  அர்ச்சகர் தேவநாதன் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் தேங்கி கிடந்தன.

இந்த நிலையில் செங்கல்பட்டு தலைமைக் குற்றவியல் நீதிபதியாக பணிபுரிந்த ஆனந்தி, பதவி உயர்வு பெற்று செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 28 ஆம் தேதி பொறுப்பேற்றார். இதனால் தேங்கிக் கிடந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது.

அர்ச்சகர் தேவநாதன் வழக்கு அடுத்த மாதம் (மே) 16 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
ஸ்ரீபெரும்புதூர், ஏப். 19- காஞ்சீபுரம்  அர்ச்சகர் தேவநாதன் வழக்கு மே மாதம் 16-ஆம் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
காஞ்சீபுரம் அடுத்த பழைய சீவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவநாதன் (35). இவர் காஞ்சீபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக இருந்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கருவறையில் பல பெண்களிடம் பாலியல் செயலில் ஈடுபட்டார். இதை தன் செல்போன் மூலம் படம் பிடித்து ரகசியமாக பார்த்து ரசித்து வந்தார்.

இந்த ஆபாச படம் பலரது செல்போனுக்கு பரவியது. இதயடுத்து சிவகாஞ்சி காவல்துறையினர் கருவறை நாயகன் அர்ச்சகர் தேவநாதன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். தலைமறைவான தேவநாதன் காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவல்துறையினர் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போது கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களை பேச்சின் ஜாலத்தில் மயக்கி முக்கிய பெண் வி.அய்.பி.களுடன் கோவில் கருவறையில் அர்ச்சகர் தேவநாதன் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. இதில் சம்பந்தப்பட்ட 4 பெண்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர்.

கோவிலுக்குச் சென்ற போது அர்ச்சகர் தேவநாதன் மயக்க சாக்லெட் கொடுத்து கருவறைக்குள் அழைத்து சென்று உறவு வைத்தார். இதனை செல்போனில் படம் பிடித்து அதை காட்டி மிரட்டி அடிக்கடி கோவில் கருவறையில் பாலியல் செயலில் ஈடுபட்டார் என காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

அர்ச்சகர் தேவநாதன் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். அவரை எந்தக் கோவிலிலும் அர்ச்சனை செய்யக்கூடாது என கூறப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு விசாரணை காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் இருந்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த நீதிமன்றத்தில் கடந்த 10 மாதங்களாக நீதிபதி இல்லாததால்  அர்ச்சகர் தேவநாதன் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் தேங்கி கிடந்தன.

இந்த நிலையில் செங்கல்பட்டு தலைமைக் குற்றவியல் நீதிபதியாக பணிபுரிந்த ஆனந்தி, பதவி உயர்வு பெற்று செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 28 ஆம் தேதி பொறுப்பேற்றார். இதனால் தேங்கிக் கிடந்த வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது.

அர்ச்சகர் தேவநாதன் வழக்கு அடுத்த மாதம் (மே) 16 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை: