வியாழன், 12 ஏப்ரல், 2012

நான் ரொம்ப ஸ்ட்ரிட்டு..’ என்ற பாணி பார்ப்பன பாரதியார்

புராண காலத்திலும் அதன் பிறகு ‘நவீன’ பாரதியிடமும் .. அதுபோலவே இன்றும்..

அதென்னங்க பார்ப்பன இந்துப் பார்வை?
-என். குமார்.
அடுத்தவன் மனைவி மீது ஆசைப்பட்டு அவளை கடத்தி சென்று கை படாமல் வைத்திருந்தாலும் அவன் ஒழுக்கக்கேடன். அவனுக்கு மரணதண்டனைதான் தீர்ப்பு என்று ராவணன் மூலமாக நீதி சொன்ன பார்ப்பனியம்,
அடுத்தவர்களின் ஏகப்பட்ட மனைவிகளை கவர்ந்து அவர்களிடம் உடல்ரீதியாக உறவும் வைத்துக் கொண்ட பெண் பித்தன் இந்திரனை தேவர்களின் தலைவர்களாக கொண்டாடுவதை பழைய புராண, இலக்கியத்தில் உள்ள பார்ப்பன இந்து பார்வை என்று சொல்லலாம்..

‘நவீன’ இலக்கியத்தின் ‘தந்தை’யான பாரதியார், பெண்ணை நிர்வாணபடுத்த முயற்சிப்பதை கண்டித்து,
பாஞ்சாலி சபதத்தில், பாஞ்சாலியின் குரலாக
தேவி திரௌபதி சொல்வாள்; – ஓம்
தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவி துச்சாதனன் செந்நீர் – அந்தப்
பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தம் ,
மேவி இரண்டுங் கலந்து – குழல்
மீதினற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் – இது
செய்யுமுன்னே முடியே’ என்றுரைத்தாள்.
என்று வீர முழக்கம் இடுகிறார்.
பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமைக்கு எதிராக, அப்படி பொங்கிய பாரதியே இன்னொரு இடத்தில்,
குளத்தில் குளிக்க சென்ற பெண்களின் துணியை தூக்கிக்கொண்டு, அவர்களை கை இரண்டையும் மேல தூக்கி கும்பிட்டபடி நிர்வாணமாக மேலேறி வந்தால்தான் துணியை திருப்பி தருவேன் என்று பெண்களிடம் பொறுக்கித் தனம் செய்த ஈவ்டீசிங் பேர்வழி கண்ணனின்  (இவன்தான் பாஞ்சாலி மானம் காக்க தன் கை கொடுத்தான்) இதுபோன்ற ஈனச் செயல்களை,
‘தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக்கொ யாத தொல்லை’  என்று பெருமித்தோடு கொஞ்சி மகிழ்கிறார்.
இது நவீன இலக்கியத்தில் உள்ள பார்ப்பன இந்துப் பார்வை.
இதுபோல் பல நியாய தர்மங்கள், பார்ப்பனர்களால், பார்ப்பன எழுத்தாளர்களால், ஊடகங்களால் ‘நான் ரொம்ப ஸ்ட்ரிட்டு..’ என்ற பாணியில் இன்றும் வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: