சனி, 14 ஏப்ரல், 2012

7 பேர் Gang Rape விபசார அழகி கடத்தி கற்பழிப்பு


சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்தவர் செல்வராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 35 வயது நிரம்பிய இவர் பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது கணவர் இறந்த பிறகு, விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடந்த வியாழன் அன்று நள்ளிரவு செல்வராணி போதையில் அசோக்பில்லர் அருகே ஷேர் ஆட்டோவுக்காக காத்திருந்தார்.
அப்போது 3 ஆட்டோ டிரைவர்கள் அவரை உல்லாசத்துக்கு அழைத்தனர். அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் செல்வராணியை ஆட்டோவில் கடத்திச் சென்று எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து 7 பேர் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
காரியம் முடிந்தபிறகு எனக்கு பணமாவது கொடுங்கள் என்று செல்வராணி கெஞ்சி இருக்கிறார். ஆனால் 7 பேரும் செல்வராணியை அனாதையாக விட்டுச் சென்று விட்டனர்.

இதனால் செல்வராணி வெள்ளிக்கிழமை மாலையில் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் போலீசில் புகார் கொடுத்தார். இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் ராமன் ஆகியோர் மேற்பார்வையில், எம்.ஜி.ஆர்.நகர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். ஆட்டோ டிரைவர்கள் தங்கராஜ், ராபர்ட், சரவணன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான இவர்கள் 7 பேரும் இரவோடு, இரவாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர். செல்வராணிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

கருத்துகள் இல்லை: