திங்கள், 14 நவம்பர், 2011

பொட்டு சுரேஷ் ரிலீஸ் : அழகிரி எஸ்கேப்


மதுரையில் மு.க.அழகிரியின் வலதுகரமாக செயல்பட்டவர் பொட்டு சுரேஷ். பொட்டுவின் தடாலடியால் கட்சியினரே அதிர்ந்தனர்.  ஒரு கட்டத்தில் அழகிரியே அதிர்ந்து போனார்.
மதுரையில் திமுகவின் செல்வாக்கு சரிந்து போனதற்கு பொட்டுபோட்ட ஆட்டம்தான் என்பதை அழகிரியே உணர்ந்தார்.
இந்நிலையில், அதிமுக ஆட்சிக்கு வந்ததும்,  நில மோசடி, கொலை உட்பட பல்வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் டெல்லிக்கு சென்ற அழகிரி, பொட்டு சுரேஷ் கைதின் போதும் டெல்லியே முகாமிட்டிருந்த அழகிரி, கடந்த ஒரு மாதமாக மதுரையில் பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார்.
பொட்டு சுரேஷுக்கு நேற்று முன் தினம் ஜாமீன் கிடைத்தது. வெளியே வந்ததும்,அண்ணனைத்தான் அழகிரி)முதலில் சந்திக்க வேண்டும் என்று சிறையில் சந்திக்க போனவர்களிடம் சொல்லியிருக்கிறார் பொட்டு.
இதைக்கேள்விப்பட்ட அழகிரி,இந்த நேரத்தில் பொட்டுவை சந்திக்க விரும்பாததால் அவர் இன்று மதுரையில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தார்.
இன்று காலை 11 மணிக்கு பொட்டு சுரேஷ் விடுதலையானார்.  ஆனால் அழகிரி சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றுவிட்டார்.

கருத்துகள் இல்லை: