சனி, 19 நவம்பர், 2011

கொத்தடிமை? சுமங்கலி’ திட்டத்தை கைவிட வெளிநாடுகள் வலியுறுத்தல்


சென்னை : ஜவுளி மில்களில் வேலை, தங்குமிடம், உணவு அளித்து மொத்தமாக ஊதியம் வழங்கும் ‘சுமங்கலி’ திட்டம் பெண்களை கொத்தடிமையாக்குவதாக இந்தியாவில் இருந்து ஜவுளி இறக்குமதி செய்யும் மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் ஏராளமான ஜவுளி மில்கள் உள்ளன. இந்திய ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய ஏற்றுமதியில் 80 சதவீதத்தை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெறுகின்றன. இந்நிலையில், தமிழக ஜவுளி மில்களில் ‘சுமங்கலி’ என்ற பெயரில் பெண்களுக்கான திட்டம் செயல்படுகிறது.
ஜப்பானில் இருந்து 90களில் அறியப்பட்ட இந்த திட்டத்தின்கீழ் 18&21 வயது பெண்களுக்கு வேலை அளிக்கப்படுகிறது. தங்குமிடம், உணவு அளிப்பதுடன் 3 ஆண்டு ஒப்பந்த காலம் முடியும்போது ரூ.36,000 முதல் ஸி56,000 வரை ஊதியம் அளிக்கப்படும். இந்த திட்டத்தில் 3 ஆண்டுகள் வேலையில் இருந்து வெளியேற முடியாது என்பதால் அதை கொத்தடிமையாக நடத்துவதாக அமெரிக்க, ஐரோப்பிய சில்லறை ஜவுளி மற்றும் ஆடை விற்பனை நிறுவனங்கள் கருதுகின்றன.

இது படிக்காத, ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்கள் நலனுக்கான திட்டம். பணிக்கான பயிற்சி பெற உதவுகிறது என ஜவுளி மில் சங்கங்கள் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. எனினும், குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை உற்பத்தி பொருட்கள் பட்டியலில் 2009 முதல் இந்திய தயாரிப்புகள் இடம்பெற்றன. இந்த மாதம் வெளியாகியுள்ள 3வது பட்டியலிலும் அது தொடர்கிறது. இதனால், இந்திய ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், மேற்கத்திய நாடுகளின் ஆடை கொள்முதல் நிறுவனங்களிடம் மீண்டும் விளக்கம் அளிக்க தமிழக ஜவுளி மில்களை சேர்ந்த பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: