செவ்வாய், 4 அக்டோபர், 2011

கான்ஸ்டபிள் கொலை - கைதான சந்தேகநபர் மரணம்

மொரட்டுவ - மோதர கான்ஸ்டபிள் கொலை - கைதான சந்தேகநபர் மரணம்


மொரட்டுவ பொலிஸ் பிரிவில் மோதர பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபர்கள் ஐவரை கைது செய்துள்ளனர்.
மோதரை பிரதேசத்தைச் சேர்ந்த நால்வரும் ரட்டியலகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வாள் மற்றும் மன்னா கத்தி என்பவற்றை கொல்கொட கங்கை பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஆயுதங்களை மீட்டெடுத்து மோதர பொலிஸ் நிலைய குழு விலங்கு பூட்டிய சந்தேகநபர் ஒருவரை அழைத்துக் கொண்டு படகில் திரும்பி வந்துக் கொண்டிருந்தபோது சந்தேகநபர் இரு கைகளாலும் பொலிஸாரை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதன்போது ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கங்கையில் விழுந்ததுடன் சந்தேகநபரும் கங்கையில் குதித்துவிட்டார்.

உடன் செயற்பட்ட பொலிஸ் குழு பொலிஸ் கான்ஸ்டபிளையும் சந்தேகநபரையும் காப்பாற்றியுள்ளது.

சந்தேகநபர் உடனடியாக பாணந்துறை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பாணந்துறை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மோதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: