சனி, 4 ஜூன், 2011

ஆர்ப்பாட்டம் சமூக நீதியை நிலைநிறுத்தும் சமச்சீர் கல்வி திட்டத்தை அதிமுக அரசு ரத்துசெய்ததை கண்டித்து

சமச்சீர் கல்வியை ரத்து ஆர்ப்பாட்டம்

சமூக நீதியை நிலைநிறுத்தும் சமச்சீர் கல்வி திட்டத்தை அதிமுக அரசு ரத்து செய்துவிட்டதை கண்டித்து சென்னையில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஏழைகள் முதல் பணக்காரர்கள் குழந்தைகள் வரை அனைவருக்கும் ஒரே சீரான கல்வியை அளிக்க வகைசெய்யும் சமச்சீர் கல்வி திட்டத்தை அதிமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்பட ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன்தொடர்ச்சியாக திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் சென்னையில் உள்ள பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசின் தன்னிச்சையான முடிவால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதுடன், கல்விக் கொள்கைக்கு துணைபோகும் அவல சூழ்நிலையும் உருவாகி இருப்பதாக சுப.வீரபாண்டியன் கூறினார்.
மேலும் பேசிய அவர், மக்களுடைய வரிப்பணத்தை பாழடிக்கக் கூடாது. 200 கோடிக்கும் மேலாக செலவிடப்பட்டு, அச்சிடப்பட்டிருக்கிற புத்தகங்களை வீணாக்கக் கூடாது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு நினைக்குமேயானால், இந்த ஆண்டே அந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த பிறகு, அதைப்பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்றார்.

கருத்துகள் இல்லை: