சனி, 4 ஜூன், 2011

Ha Ha Ha 1 லட்சம் பேர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈ

ராம்தேவுடன் சேர்ந்து ஏறத்தாழ 1 லட்சம் பேர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொண்டர்கள் மைதானத்திலேயே தொடர்ந்து தங்கி இருப்பதற்கு வசதியாக அங்கு 1300 கழிவறைகள் மற்றும் குளியல் அறைகளும் அமைக்கப்படுகின்றன.

உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முதல் நாளான நேற்றே, பாபா ராம்தேவின் ஆதரவாளர்கள் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ராம்லீலா மைதானத்தில் குவிந்து விட்டனர். மைதானம் முழுவதும் கொடிகள், ராம்தேவின் போஸ்டர்கள் மற்றும் தோரணங்களால் காவிமயமாக காட்சியளிக்கிறது.


பல தொண்டர்கள் டி.வி. கேமரா முன்பு தோன்றி பாரத் மாதா கி ஜெய்', வந்தே மாதரம்' என்பது போன்ற கோஷங்களை விண்ணதிர முழங்கியதையும் பார்க்க முடிந்தது.


அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது ஆதரித்த இந்தி திரையுலகம், பாபா ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்தை ஆதரிக்கவில்லை.

இதுபற்றி பிரபல நடிகர் சல்மான்கான் கூறுகையில்,

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துவது நல்ல விஷயம்தான். ஆனால், அதற்காக உண்ணாவிரதம் இருக்க தேவையில்லை. லஞ்சம் வாங்க வேண்டாம் என்று தனது ஆதரவாளர்களிடம் கூறினாலே போதும் என்றார்.

நடிகர் ஷாருக்கான் கூறுகையில்,

ஒருவர் உண்ணாவிரதம் இருந்து தலைவர் ஆனதால், ராம்தேவும் அதே வழிமுறையை பின்பற்றுகிறார். அவரை நான் ஆதரிக்க மாட்டேன் என்றார்.
நடிகை ஷபனா ஆஸ்மியும், பாபா ராம்தேவை ஆதரிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

அட கொய்யாலே  கடைசியாக பிஜேபி மீண்டும் பதவிக்கு வருவதற்கு சீரியசாக  முயற்சி எடுக்க தொடங்கி விட்டது. 
அயோத்தி ஆறின கஞ்சியாகி விட்டாலும் பரவாயில்லை அன்ன ஹசரேயும் ராம்தேவும் பிஜேபியை கரை சேர்கிறார்களா பார்ப்போம்.
காங்கிரஸ்சின் தளம்பலையும் புலம்பலையும் பார்க்கும்போது பிஜேபி கரை சேரத்தொடங்கி விட்டது போலத்தான் தெரிகிறது. 
அட டா முன்றாவது அணி இடது சாரி மாயாவதி நிதிஷ் குமார் போன்றோர் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லையே .

கருத்துகள் இல்லை: