இவரைக் கண்டுபிடிக்க சுவிற்சலாந்து, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அந்த அந்த நாட்டுப் பொலிஸார் தீவிர புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டிருந்தன. இவர் பாரிஸுக்குத்தான் கடத்திக் கொண்டு வரப்பட்டிருக்கின்றார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பாரிஸ் பொலிஸார் கடந்த 02 ஆம் திகதி இவரைக் கண்டு பிடித்துக் காப்பாற்றினார்கள்.
அத்துடன் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட சிலரைக் கைது செய்தும் உள்ளார்கள். சட்டவிரோத தடுத்து வைப்பு ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இன்னும் பலர் கைது செய்யப்பட இருக்கின்றார்கள். காப்பாற்றப்பட்ட இளைஞன் சுவிஸுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக