சனி, 23 அக்டோபர், 2010

500க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குத் தடை,மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க 500க்கும்

சென்னை: மத்திய அரசு நடத்தி வரும் கேந்திரி வித்யாலாயா உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளிகள், மாணவர்களிடமிருந்து எந்தவித கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசு அமைத்துள்ள பள்ளிக் கட்டண நிர்ணயம் தொடர்பான நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தப் பள்ளிகளுக்கு உங்களது மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணம் குறித்த விவரத்தை தெரிவிக்குமாறு கோரப்பட்டிருந்தது. ஆனால் அவர்களிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

இதையடுத்து முன் அனுமதி பெறாமல் இனி எந்தக் கட்டணத்தையும் இந்தப் பள்ளிகள் மாணவர்களிடம் வசூலிக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பதிவு செய்தவர்: priya
பதிவு செய்தது: 22 Oct 2010 1:27 pm
can i know the list of the 500 school names........please if u know send me priya_chennai1987@rediffmail.com

பதிவு செய்தவர்: Kavitha
பதிவு செய்தது: 22 Oct 2010 12:29 pm
6000 தனியார் பள்ளிகளுக்கும் தமிழ்நாடு அரசால் கட்டளை இட முடியாதா? கொள்ளை நோக்கோடு கல்வி கற்றுக்கொடுக்கும் பள்ளிகளில் படித்த மாணவன் அரசுத்துறையில் சேர்ந்தால் கண்டிப்பாய் இலஞ்சம் வாங்குவான் கொள்ளையை பள்ளியிலேயே கற்றுக்கொண்டு விடுகிறான் வீணாய் போன அரசியல் வாதிகள் கல்வியில் கொள்ளையடிப்பவனுக்கு பாதுகாப்பாய் உள்ளனர். கேடு கெட்ட தனியார் பள்ளிகள் இஷ்டம் போல் பள்ளிக் கட்டணம் விதிக்கின்றனர். அப்பாவி பொதுமக்கள் நெற்றி வியர்வை சிந்தி உழைத்த பணத்தை பள்ளிகளுக்கு கொடுக்கவேண்டும்

கருத்துகள் இல்லை: