இவ்வெடிப்பு சம்பவம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இடம்பெற்றுள்ளது என இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்துள்ளபோதும். இந்த வெடிப்பிற்கான காரணிகள் சந்தேகத்தையே தோற்றுவித்துள்ளதாக வவுனியா வாசியொருவர் தெரிவித்துள்ளார்.
வாகன உரிமையாளரும் அவரின் நண்பரும் வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு கடைக்கு சென்றபோதே இவ் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ் வெடிப்பு சம்பவத்தினால் காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிப்பு சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக