
இவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கையிலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 15 பெண்களும் 18 குழந்தைகளும் அடங்குவர். இவர்களில் பல குழந்தைகள் சுகயீனமுற்றிருந்ததாகவும், பலர் பல நாட்கள் ஒழுங்கான உணவின்றி தவித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பயணத்தின் போது ஒரு பெண் மற்றும் ஆண் உட்பட இருவர் மரணமடைந்துமுள்ளனர். மீட்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் கூறப்படுகின்றது. இவர்கள் அனைவரும் இப்பயணத்திற்காக சிபா என்ற கடத்தல்காரருக்கு சுமார் 2000 அமெரிக்க டொலர்கள் வரை பணம் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.
தற்போது இவர்கள் ஜகார்த்தாவிலுள்ள இந்தோனேசிய குடிவரவு தடுப்புமுகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக