சனி, 23 அக்டோபர், 2010

EPRLF மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக வரதராஜப்பெருமாள் ஜரோப்பா பயணம்!

ஈ.பி.ஆர்.எல்.எவ் (நாபா) மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக வரதராஜப்பெருமாள் ஜரோப்பா பயணம்!


பிரான்ஸில் இடம்பெறவுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ்(நாபா) அணியின் சர்வதேச மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னைநாள் வடகிழக்கு முதல்வரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் நாபா அணியின் முக்கியஸ்தருமான அண்ணாமலை வரதராஜப்பெருமாள் ஜரோப்பாவிற்கு பயணமாகியுள்ளார்.

இன்றையதினம் 23ம் திகதியும் நாளை 24ம் திகதியும் பிரான்ஸில் நாபா அணியின் சர்வதேச மகாநாடு இடம்பெறவுள்ளது. இந்த மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவ் அமைப்பின் இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, சுவிஸ்,நோர்வே போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் பிரான்ஸில் ஒன்றிணைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: