செவ்வாய், 21 அக்டோபர், 2014

நம்மை பார்ப்பனர்கள் கேவலப்படுத்தவே தீபாவளியை கொண்டாடுகிறார்கள் ! பெரியார் வாக்கு !

தீபாவளி வெடிகள்புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப்புரட்டை உணர்ந்தவர்களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்! அர்த்தமற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது
பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்! எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால், நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து – புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? ‘நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்?’ என்றால், அதற்கு, நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்’ என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? இதைப் பார்ப்பனரல்லாத மக்கள் 1000-த்துக்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள்.

பட்டாசு கொளுத்தி நாட்டை நாசமாக்குவோம் ! பட்டாசின் பின்னணியே மிகக் குரூரமானது ! தேவையா இது ?

சுத்தமான இந்தியா’என்ற பெயரில் நரேந்திர மோடி சீவக்கட்டையைத் தூக்கிக் கொண்டு நிற்கிறார். லாஜிக்கலாக பார்த்தால் அவரை எதிர்ப்பவர்கள்தான் பட்டாசுகளைக் கொளுத்தி இந்த நாட்டை அசுத்தமாக்குவோம் என்று கொடிபிடிக்க வேண்டும். இங்கு அப்படியே எதிர்மறையாக நடக்கிறது. மோடியின் ஆதரவாளர்கள்தான் பட்டாசு வெடித்து நம் இந்துத்துவத்தை நிறுவுவோம் என்கிறார்கள். மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் கூட ‘அமைதியான தீபாவளி’ என்ற கோஷத்தைத்தான் முன்வைக்கிறார். இங்கே இருக்கும் அவரது ஆதரவாளர்கள்தான் காதைப் பிளக்கச் செய்வோம் என்கிறார்கள்.  தீபாவளியன்று நிலமும் காற்று மாசடைவதும் ஒரு பக்கம் இருக்கட்டும்.& பட்டாசுத் தொழிலின் பின்னணியே மிகக் குரூரமானது. காலங்காலமாக சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரத்தின் குழந்தைகளை பட்டாசுத் தொழிற்சாலைகளின் முதலாளிகள்தான் நாசமாக்குக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்குச் செல்கிறார்கள். அப்படியே பள்ளிக்குச் செல்பவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் பட்டாசு வேலையைச் செய்கிறார்கள். படிப்பில் கவனம் சிதறுகிறது. பிறகு படிப்பை நிறுத்திவிடுகிறார்கள். கல்குவாரிகளுக்கும் பட்டாசுத்தொழிற்சாலைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அங்கேயாவது கொஞ்சம் வெளிக்காற்றைச் சுவாசிக்க வாய்ப்பிருக்கிறது. இங்கு தினமும் பத்து மணி நேரங்களுக்கு குறைவில்லாமல் நெடியிலேயே கிடக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் பட்டாசுத் தொழிற்சாலைகளின் விபத்துகளில் காயமடைபவர்களும், உயிர் இழப்பவர்களும் எத்தனை பேர் இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்? வெளியில் வரும் எண்ணிக்கையே அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது.

மும்பையில் ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகளோடு தொடர்பு ? சாப்ட்வேர் எஞ்சினியர் கைது !

ஈராக்கிலும், சிரியாவிலும் சில பகுதிகளை உள்ளடக்கி தங்களுக்கு என்று பிரத்யேக ஆட்சியை நிலைநாட்டுவதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுடன் மும்பை அந்தேரியை சேர்ந்த அனீஸ் அன்சாரி என்ற 24 வயது சாப்ட்வேர் என்ஜினீயர் தொடர்பு வைத்ததாக கூறப்பட்டது. மேலும், அவர்கள் பாந்திராவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தை தகர்க்க எண்ணியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தீவிரவாத தடுப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், தீவிரவாத தடுப்பு படையினர் உடனடி நடவடிக்கை எடுத்து அனீஸ் அன்சாரியை கைது செய்தனர். அவரிடம் இருந்து கம்ப்யூட்டர், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டு உத்தரவின்பேரில் வருகிற 26–ந் தேதி வரை காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.dinamalar.com

Hariyana: காளைமாட்டின் விலை 7 கோடி ரூபாய்க்கும் அதிகம் ! விற்க மறுத்த காளைமாட்டின் உரிமையாளர் !


ஹரியானா: உத்தரப் பிரதேசத்தில் ஒரு மாட்டிற்கு 7 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டும் அதன் உரிமையாளர் மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மீரட் நகரில்  கால்நடைகளின் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கரம்வீர் சிங் என்பவரின் காளைமாடு  மிகச்சிறந்த காளைமாடாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 14 அடி நீள எருமை: முர்ரா வகையைச் சேர்ந்த யுவராஜ் என்ற அந்த மாடு  14 அடி நீளமும் 5 அடி 9 அங்குலம் உயரமும் கொண்டது
“பலே” எருமை யுவராஜ்: யுவராஜிடம் இருந்து நாள்தோறும் 3.5 மில்லி முதல் 5 மில்லி வரை விந்தணு எடுக்கப்பட்டு 35 மில்லி வரை செறிவாக்கம் செய்யப்படுகிறது. 0.25 மில்லி கொண்ட ஒரு குப்பி விந்தணு ரூபாய் 1500 க்கு விற்கப்படுகிறது.
வருஷத்துக்கு 50 லட்சம்: அந்த வகையில் யுவராஜ் ஆண்டுக்கு ரூபாய் 50 லட்சம் வரை உரிமையாளருக்கு சம்பாதித்து கொடுக்கிறது. அடடா இத்தாய்ன் மச்சகாளைன்னு சொல்லுதாகளோ ? ம்ம்ம் நாம  பெருமூச்சுவிட்டு.....

திங்கள், 20 அக்டோபர், 2014

சுதாகரன் திருமணம் ஒரு மொய் விருந்து ! 200 கோடி மொய்ப்பணம் அன்றைய மதிப்பில் ! சினிமா சினிமாதான்?

செப்டம்பர் 13, 1995 தேதியிட்ட ஜூ.வி. இதழில் இருந்து... ‘‘உலகிலேயே இதுவரை நடக்காத அளவுக்கு மிக மிக காஸ்ட்லியான ஒரு மொய் விருந்து நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர்! வளர்ப்பு மகனுக்குத் திருமணம் என்ற பெயரில் பல ரூபத்திலும் வந்த பரிசுப் பொருட்களை, ஏழாம் தேதி இரவே கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்தார்கள்! தாராளமாக இருநூறு கோடி ரூபாய் தேறும் என்று தெரிந்து சந்தோஷத்தில் மிதக்கிறார்கள்!’’ - முதல்வருக்கு மிக நெருங்கிய அமைச்சர் ஒருவரே தனது நண்பர்களிடம் தாங்க முடியாமல் சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை. ‘இப்படி ஒரு திருமணம் நடத்துவதற்காகவே வளர்ப்பு மகனைத் ‘தத்து’ எடுத்தாரா அல்லது வளர்ப்பு மகனாகச் சுதாகரனை எடுத்ததால் இந்த ஆடம்பரத் திருமணமா?" என்ற சஸ்பென்ஸுக்குச் சரியான விடை இதுவரை கிடைக்கவில்லை. எப்படியோ... ‘சுமார் இரண்டு மாத காலமாக பத்திரிகைகளும், எதிர்கட்சித் தலைவர்களும் கிளப்பிய ஏராளமான விமர்சனங்கள் என்னைத் துளியும் பாதிக்கவில்லை. எல்லா தடைகளையும் மீறி நான் நினைத்ததைச் சாதித்துக்கொண்டிருக்கிறேன்’ என்ற எண்ணமும் பெருமையும், மணமேடையில் ஓடியாடிக்கொண்டிருந்த முதல்வர் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது!
‘‘பண ரீதியாக முதல்வர் தான் நினைத்ததைச் சாதித்திருக்கலாம்! ஆனால், அரசியல் ரீதியாக மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டார். எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அ.தி.மு.க-வுக்கென்று இருந்த அசைக்க முடியாத வோட்டு வங்கிக்கு, தானே வெடி வைத்துக்கொண்டுவிட்டார் முதல்வர்!’’

- திருமணம் முடிந்த கையோடு கூடிப் பேசிய மூன்று அமைச்சர்களின் ‘கமென்ட் இது’ பலரிடமும் தீர விசாரித்த போது தெரியவந்தது இதுதான் -

ஜெயமோகன் : கருத்துகளை பரிமாறும் மென் திறமையை கல்வி நிலயங்கள் அளிப்பதில்லை !

விழாவில் பங்கேற்ற வாசகர்கள். தி இந்து தமிழ் ஒராண்டு கொண்டாடத்தின் ஒரு பகுதியாக திருநெல்வேலியில் நேற்று நடைப்பெற்ற வாசகர் திருவிழாவில் பேசுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன். உடன் இடமிருந்து தொழிலதிபர் எச்.வசந்தகுமார், சமூக செயல்பாட்டாளர் ஷேக் அப்துல்லா, பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி கருத்துகளை புரிந்து கொள்வதற்கான பயிற்சியை கல்வி நிலையங்கள் அளிக்கவில்லை என்றும் தகவல்களை மட்டும் மனப்பாடம் செய்ய கற்றுத்தருகின்றன என்றும் எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்தார்.
“தி இந்து” தமிழ் நாளிதழின் ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டுவரும் வாசகர் திருவிழா கோவை, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூரை தொடர்ந்து திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது.வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையிலுள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற விழாவில் ஜெயமோகன் பேசியதாவது:
இளம் வாசகர்கள் பலரும் தற்போது தமிழ் வாசிப்பதில்லை. குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் நாளிதழ்களை படிப்பதில்லை. இது தொடர்பாக ஒரு சர்வே எடுத்தபோது 400 வார்த்தைகளுக்கு மேலுள்ள கட்டுரைகளை தமிழ் வாசகர்கள் படிப்பதில்லை என்று தெரியவந்தது. இது அதிர்ச்சி அளிக்கிறது.

500 தொழிலாளர்களுக்கு கார்கள் 300 தொழிளார்களுக்கு அபாட்மென்ட் குஜராத் முதலாளியின் பரிசு !

Surat
A diamond merchant in Gujarat has gifted over 1,000 employees cars, homes and jewelry as Diwali bonus in a stunning act of generosity, Oprah-style.
Savjibhai Dholakiya, an exporter based in the diamond city of Surat, says his workers deserve big rewards for their hard work and loyalty.
About 500 employees opted for cars, 200 went for jewelry and some 300 accepted deposits on apartments as their annual incentive. The gifts were handed over on Sunday at a sprawling ground where brand new cars were lined up in neat queues.தீபாவளியை முன்னிட்டு சூரத்தில் உள்ள வைர ஏற்றுமதி நிறுவனமான அரிகிருஷ்ணா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அந்த நிறுவனம், தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 1200 ஊழியர்களின் வாழ்வில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளிச்சத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைவரான சாவ்ஜி தொலாக்கியா, தனது பணியாளர்களான கைவினைஞர்கள் மற்றும் பொறியாளர்களை அழைத்து கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை காண்பித்து, அவர்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ள சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.  ம்ம்ம்  நம்மளுக்கும் இருக்காய்ங்களே ?

சொத்து குவிப்பின் உண்மை என்ன? எதிர்காலத்திலாவது வாய்மை நிலை நாட்டப்படும் !

திமுக தலைவர் கலைஞர் 19.10.2014 ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்” - இப்படி ஒரு பாடலுக்கான முதல் வரியைப் படித்திருப்பாய்! அடுத்தடுத்த வரிகளைப் படித்தால்தான் என்ன சொல்ல வந்தேன் என்பது உனக்குப் புரியும். முழுப் பொருளும் விளக்கமாகத் தெரியும்.ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றிய விவரங்களும், 18 ஆண்டுக் காலம் நடைபெற்ற வழக்கும், இறுதியாக அளிக்கப்பட்ட தீர்ப்பும், நான் புதிதாகச் சொல்லி நீ தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றல்ல. நாட்டு மக்களுக்கே நன்றாகப் புரியும்.இந்த விவகாரங்களில் கைது, சிறை, தண்டனை தொடர்ந்து நிபந்தனை ஜாமீன், இடைக்கால விடுதலை என்ற அத்தியாயங்களில் இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கைப் பிரித்துப் படிக்கலாம் என்றாலும் முழுமையாக விரித்துச் சொன்னால்தான் உனக்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது என்பதால் - -

கமலினி முகர்ஜி :மீண்டும் மீண்டும் கமெராக்கள் ஆணை சுற்றியே ஓடுகிறது !

ஹீரோயின்களுக்கு படங்களில் முக்கியத்துவம் தருவதில்லை என்றார் கமாலினி முகர்ஜி.‘வேட்டையாடு விளையாடு, ‘காதல்னா சும்மா இல்ல ஆகிய படங்களில் நடித்திருப்பவர் கமாலினி முகர்ஜி. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். எதற்கும் அதிர்ந்து பேசாமல் அமைதியாகவே எல்லாவற்றையும் அணுகும் குணம் கொண்டவர். பேட்டி அளிக்கும்போதும் யார் மனதையும் புண்படுத்தாமல் பக்குவமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுபவர். சக ஹீரோயின்களுடன் ஒப்பிடும்போது இவருக்கு வரும் பட வாய்ப்பு மிக குறைவு. அவரை சந்திப்பவர்கள், ‘அதிக படங்களில் நடிக்காதது ஏன்? என்று கேட்கின்றனர். இது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பூனைபோல் அமைதியாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென புலியாக மாறி சீறத் தொடங்கினார்.

போலீஸ் நிலையங்களில் CCTV கமெரா பொருத்த உயர்நீதிமன்றில் மனு !

சென்னை: அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி பொருத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். காவல் நிலைய மரணத்தை தடுக்க சிசிடிவி பொருத்துவது பயன் தரும் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். மனுவை நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சசிதரன் அமர்வு விசாரித்தனர். சிசிடிவி பொருத்த முடிவு எடுப்பது அரசின் கொள்கை சம்பந்தப்பட்டது நீதிபதிகள் வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.dinakaran.com

நடிகர் சந்திரசேகர் திமுகவை விட்டு அதிமுகவுக்கு போகமாட்டாராம் !

வாகை சந்திரசேகர் தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார். 1999 பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
வாகை சந்திரசேகர் தற்போது கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் அ.தி.மு.க.வில் சேர முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.
இதுகுறித்து வாகை சந்திரசேகரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது:–
நான் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேரப்போவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. தி.மு.க.வை விட்டு ஒருபோதும் விலக மாட்டேன். நான் தி.மு.க.வில் ஒரு அங்கம். தமிழன் என்று சொல்வதில் எவ்வளவு பெருமைப்படுகிறேனோ அதே பெருமை தி.மு.க.காரன் என்பதிலும் எனக்கு கிடைக்கிறது.
தி.மு.க.தான் எனக்கு அடையாளம். எனவே நான் இந்த கட்சியில் இருந்து விலகப் போகிறேன் என்ற செய்தியை யாரும் நம்ப மாட்டார்கள்.
என் மீது வழக்கு போடப்பட்டபோது தலைவர் கலைஞர் விசாரித்தார். தளபதி ஸ்டாலின் வக்கீல் ஏற்பாடு செய்து கொடுத்தார். இருந்தாலும் சும்மா சும்மா புகை வருமா ? சூட்கேஸ் பவரும் பெருசுதாய்ன் ! சுப்பிரீமும் இப்படிதாய்ன் உதார் விட்டாஹ அப்புறம் இருவது சீக்களுக்கு போனாங்க !

தனியார் மருத்துவக் கல்லூரி கொள்ளைக்கு நீதிமன்ற நல்லாசி !

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் முறைகேடுகளையும் நன்கொடை கொள்ளையையும் கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது எனத் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.
ட்டாய நன்கொடை வசூலித்தது மற்றும் மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக தில்லுமுல்லுகள் செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டில் சிக்கிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்த நான்கு வழக்குகளையும் ஒன்றன்பின் ஒன்றாக ஊத்தி மூடிவிட்டது, சென்னை உயர்நீதிமன்றம். தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்கள்தான் நடத்திவருகின்றன என்ற நிலையில், இத்தீர்ப்பு அக்கும்பலின் அட்டூழியங்கள், முறைகேடுகள் அனைத்தையும் ஏறத்தாழ சட்டப்பூர்வமாக்கிவிட்டது.
கேத்தன் தேசாய்
கோடிகோடியாய் இலஞ்சம் பெற்றுக் கொண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை வாரி வழங்கிய இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேத்தன் தேசாய் (கோப்புப் படம்)
கடந்த 2009-ம் ஆண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டாய நன்கொடை வசூலிக்கப்படுவது தொடர்பாக “டைம்ஸ் நௌ” தொலைக்காட்சியும் “டைம்ஸ் ஆஃப் இந்தியா” ஆங்கில நாளேடும் இணைந்து நடத்திய இரகசிய புலனாய்வு நடவடிக்கையில், சென்னை போரூரிலுள்ள சீறீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பதிவாளர் சுப்பிரமணியன், தம்மிடம் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்காக அணுகிய மாணவர் ஒருவரிடம் கட்டாய நன்கொடை ரூ 40 இலட்சம் கேட்டதும்; சென்னை குரோம்பேட்டையிலுள்ள சீறீ பாலாஜி மருத்துவக் கல்லூரியின் நிர்வாக அதிகாரியான ஜான்சன் ரூ 20 இலட்சம் கேட்டதும் வீடியோ ஆதாரத்துடன் அம்பலமாகின.

அமைச்சர் தம்பி கொலை பேரம் : .6 லட்சத்தில் வீட்டுமனை, அடியாளுக்கு மினி வேன் ! திரைப்படங்கள் நிஜவாழ்க்கை ஆகிறது ?

அமைச்சரின் தம்பியை கொலை செய்யும் கூலிப்படை தலைவனுக்கு ரூ.6 லட்சத்தில் வீட்டுமனை, அவரது அடியாளுக்கு மினி வேன் பேரம் பேசப்பட்ட தகவல் காவல்துறையினர் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் வசித்து வந்தவர் ஜெயராமன் மகன் ரவி(45). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் பால்வளத் துறை அமைச்சர் ரமணாவின் சித்தப்பா மகன். கந்தன்கொல்லை அடுத்த புஜ்ஜங்கண்டிகை பகுதியில் உள்ள மூன்று ஏக்கர் வில்லங்க நிலத்தின் பிரச்சனையில் தலையிட்ட இவரை, கடந்த 13 ஆம் தேதி பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் கொலை செய்தனர்.& இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்து, கொலைக்கு மூலகாரணமாக இருந்ததாக அதிமுகவை சேர்ந்த செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன், நெமிலிச்சேரி திருநாவுக்கரசு ஆகிய இருவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கூலிப்படை தலைவனான வேப்பம்பட்டு முருகன்(35), வெள்ளவேடு தாஸ் என்கிற புல்லட் தாஸ்(42), பெரவள்ளூர் குட்டி என்கிற பத்மநாபன்(45), அனகாபுத்தூர் சரண் என்கிற சரண்ராஜ்(28) உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.http://tamil.webdunia.com/

Goa இந்தியன் பனோரமாவில் தேர்வான தமிழ்ப் படம் குற்றம் கடிதல்

கோவாவில் வருடந்தோறும் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழா முக்கியமானது. இதில் இந்தியன் பனோரமா பிரிவில் சிறந்த இந்தியத் திரைப்படங்களும் திரையிடப்படும். சென்ற வருடம் தங்கமீன்கள் படம் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இந்த வருடம் இந்தியா முழுவதிலுமிருந்தும் 181 படங்கள் இந்தியன் பனோரமாவில் திரையிட அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 26 திரைப்படங்கள் மட்டுமே தேர்வாயின. தமிழிலிருந்து ஒரேயொரு படமே - குற்றம் கடிதல் - தேர்வானது. இந்தப் படத்தை ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் ஜே.சதீஷ்குமார் தயாரித்திருந்தார்.  படத்தை இயக்கியவர் பிரம்மா. குழந்தைகளைப் பற்றிய படம் இது. இந்த மாத தொடக்கத்தில் ஜிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. tamil.webdunia.com

அரசியல் கட்சிகளுக்கு வருமானவரி சலுகை 1,381 கோடி ! மக்களுக்கு 1,381 கோடி பட்டை நாமம் ?

புதுடில்லி : நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு, கடந்த இரண்டு 2012 - 13ல், 318 கோடி ரூபாய் சலுகை பெற்ற காங்கிரஸ், 2013 - 14ல், 425 கோடி ரூபாய் சலுகை பெற்றுள்ளது.அது போல, பா.ஜ., 2012 - 13ல், 17 கோடி ரூபாயும், 2013 - 14ல், 321 கோடி ரூபாயும் சலுகை பெற்றுள்ளது.இந்த இரண்டாண்டு காலகட்டத்தில், உ.பி.,யில், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி, 164 கோடி ரூபாயும்; அதன் எதிரி கட்சியான பகுஜன் சமாஜ், 20 கோடி ரூபாயும் வரிச்சலுகை பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 93 கோடி ரூபாய்; இந்திய கம்யூனிஸ்ட் இரண்டு கோடி ரூபாய்; ஐக்கிய ஜனதாதளம், 13 கோடி ரூபாய்; லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய லோக்தளம், நான்கு கோடி ரூபாய் வரிச்சலுகை பெற்றுள்ளன.  அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி சலுகை எதுவும் கொடுக்க கூடாது. அவர்கள் வசூலிக்கும் வசூல் மிரட்டி வசூலிக்க பட்டதே தவிர மக்கள் யாவரும் அவர்களாக விரும்பி கொடுபதில்லை. 1381 கோடி ருபாய்களுக்கு விழுப்புரம் முதல் திண்டுக்கல் வரை ரயில் பாதை போடலாம். மதுரை போடி வழியாக கேரளா மாநிலம் கொச்சிவரையில் ரயில் பாதை போடலாம். இந்தியாவில் எந்த அரசியல் கட்சிகளும் பிச்சை காரர்கள் அல்ல. எல்லாம் கோடி கணக்கில் பணம் புரளும் ஒரு இயக்கமாக இருக்கிறது.

தேர்தல் முடிவுகள் ! முதல்வர் பதவிக்கு பாஜகாவில் பலத்த போட்டி !

மும்பை : மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, இரண்டு மாநிலங்களிலும் முதல்வர் பதவியை பெறுவதில், பா.ஜ., தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.அரியானாவில், பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, முதல் முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது. அதே போல், மகாராஷ்டிராவில், பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.இதன் அடுத்த கட்டமாக, இரண்டு மாநிலங்களிலும் முதல்வர் பதவி யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. தேர்தலுக்கு முன் வரை, அரியானாவில், பா.ஜ.,வுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. 2009ல், நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 90 இடங்களில், பா.ஜ., நான்கு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதனால், இங்கு பா.ஜ.,வுக்கு பெரிய அளவில் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள் இல்லை.

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

ராணா டக்குபதியின் காதலுக்கு த்ரிஷாவின் tata?

செப்.18 (டி.என்.எஸ்) தெலுங்கு நடிகர் ராணா – திரிஷா காதல் முறிந்து விட்டதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவி உள்ளது.இருவரும் கடந்த சில மாதங்களாக தீவிரமாக காதலித்தனர். பட விழாக்களுக்கு ஜோடியாக வந்தார்கள். வெளிநாடுகளில் நடந்த பட விழாக்களுக்கும் ஒன்றாகவே சென்றார்கள்.சமீபத்தில் மலேசியாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் கணவன் – மனைவி போல ஜோடியாக பங்கேற்றார்கள். அருகருகே உட்கார்ந்து சிரித்து பேசிக் கொண்டும் இருந்தனர். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து இருக்கலாம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.பின்னர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் அடுத்த வருடம் திருமணம் இருக்கும் என்றும் கூறப்பட்டது.இந்த நிலையில்தான் தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இருவருக்கும் நெருக்கமானவர்களும் இதை உறுதி செய்தனர். maalaimalar.com

கலைஞர் :ஜெயலலிதாவின் தண்டனைக்காக மகிழவும் இல்லை ! ஜாமீனுக்காக வருத்தப்படவும் இல்லை !

ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அவர்கள் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப் போவதாக அறிவித்தார். ஆனாலும் குற்றஞ்சாட்டப்பட்டோர் தங்களின் பாதுகாப்புக் கருதி, தீர்ப்பினை செப்டம்பர் 27ஆம் தேதிதான் வெளியிட வேண்டு மென்று கோரிக்கை வைத்து, அதையும் நீதிபதி ஏற்றுக்கொண்டு, செப்டம்பர் 27ஆம் தேதியன்றே தீர்ப்பினை அளித்தார்.
அந்தத் தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு நூறு கோடி ரூபாய் அபராதமும், நான்காண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.மேலும் சசிகலா, இளவரசி,வி.என். சுதாகரன் ஆகியோருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா பத்துக் கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

Jeyalalitha : கவலை இல்லை, அஞ்ச மாட்டேன், தளர்ந்து போக மாட்டேன் !

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா தற்போது ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனது பொது வாழ்வு நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானதாக இருந்து வருகிறது. கொஞ்ச நஞ்ச நெருப்பா கொடைநாடு முதல் கோடிகள்  பறக்குதே? பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வது, எத்தகைய இடர்பாடுகளை உடையதாக இருக்கும் என்பதை அரசியல் வாழ்வில் நுழைந்த நாளில் இருந்து உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.  அம்மணி உங்களுக்கு எங்கே இடர்பாடு அல்லாம் மக்களுக்குதாய்ன் வீட்டை  எரித்து  சோறு ஆக்கும் முட்டாள் கூட்டம் என்பது நல்லாவே தெரியறது ?
அ.தி.முக. என்னும் பேரியக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உன்னையே நீ அர்ப்பணித்து பணியாற்ற வேண்டும்" என்று புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். என்னிடம் பெற்றுக் கொண்ட சத்தியத்தை இதயத்தில் ஏற்று நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வேற இன்னான்னா சத்தியம் வாங்கினாக ? விலாவாரியா சொல்றது ? அடேங்கப்பா இன்னா தியாகம் ?
தொடர்ந்து அந்தப் பாதையிலேயே என்னுடைய பயணம் அமையும்

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தமிழ்செல்வன் வெற்றி !


மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் சியோன் கோலிவாடா தொகுதியில் போட்டியிட தமிழரான கேப்டன் தமிழச்செல்வனுக்கு பா.ஜ.க வாய்ப்பு வழங்கியது. இன்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் தமிழச்செல்வன் 3738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கேப்டன் தமிழ்ச்செல்வனுக்கு 40869 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் சதாம்கர் மங்கேஷ் ஸ்ரீதருக்கு 37131 வாக்குகளும் கிடைத்தன. 3-வது இடம் பிடித்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஷெட்டி ஜெகன்னாத் அஞ்சண்ணாவுக்கு 23107 வாக்குகள் கிடைத்தது. முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, தமிழ்ச்செல்வன் வெற்றி பெறும் நிலையில் உள்ளார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது maalaimalar.com

ஐஎஸ் தீவிரவாத கொடியுடன் காஷ்மீர் இளைஞர்கள் கோஷம் எல்லையில் மீண்டும் பரபரப்பு !

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கொடிகளை ஏந்தி இளைஞர்கள் சிலர் நேற்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சிரியா மற்றும் ஈராக்கில் இஸ்லாமிய சட்டத்தை அடிப்படையாக கொண்ட தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். இவர்களுக்கு தற்போது சமூக வலைத்தளங்கள் மூலமாக உலகம் முழுவதும் ஆதரவு ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர இளைஞர்கள் சிலர் சென்றுள்ளதாக கடந்த மாதம் உளவுத்துறை எச்சரித்திருந்தது.

நேரடி மானிய திட்டம் ! காங்கிரசின் திட்டத்தை பாஜக பின்பற்ற முடிவு !

முந்தைய மத்திய அரசு அறிமுகப்படுத்திய, நேரடி மானிய திட்டத்தை, நவம்பர், 10ம் தேதி முதல் மீண்டும் அமல்படுத்த, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின், நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியதாவது:பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே, சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக செலுத்தும் திட்டத்தை, மீண்டும் திறமையான வகையில் செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால், சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியமானது, நவம்பர், 10ம் தேதி முதல், பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும்.டில்லியில் உள்ள அரசு பங்களாக்கள் எதுவும், இனி, தலைவர்களின் நினைவகங்களாக மாற்றப்படாது.குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில், முதல்கட்டமாக, 35.9 கி.மீ., துாரத்திற்கு, 10 ஆயிரத்து, 773 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட உள்ள, மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மகாராஷ்டிரா ஹரியானா தேர்தல் முடிவுகள் ! ஹரியானாவில் பாஜக பெரும்பான்மை ! மகாராஷ்ட்ராவில் இழுபறி ?

புதுடில்லி : அரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங் களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று எண்ணப்படுகின்றன. இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்பது, இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில், கடந்த 15ல், சட்டசபை தேர்தல்கள் நடந்தன. மகாராஷ்டிராவில், ஆட்சியில் இருந்த காங்., - தேசியவாத காங்., கூட்டணியில் முறிவு ஏற்பட்டதால், அங்கு, ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

S.S.Vasan ! சந்திரலேகாவை அப்படியே இந்தியில் மொழிமாற்றம் செய்து 150 பிரதிகள் எடுத்த ஒரே தமிழ் தயாரிப்பாளர் !

தமிழில் பேசும் படங்கள் வரத் தொடங்கிய காலத்தில், அதாவது 1930-31 வாக்கில் மதுரையில் கலை ஆர்வலரான சச்சிதானந்தம் பிள்ளை என்பவர் 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி' என்னும் பெயரில் ஒரு நாடக நிறுவனத்தை நடத்தி வந்தார். அதில், ஆதரவற்ற சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை சேர்த்துக் கொண்டு பல நாடகங்களில் அவர்களை நடிக்கச் செய்தார். அதற்கு முறையான நடிப்பு, நடனம், பாடல் முதலிய நுண்கலைகளில் தேவையான பயிற்சியும் அளித்து ஒரு குருகுலம் போல நடத்தி வந்தார்.

பிற்காலத்தில் மிகவும் பிரபலமான பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., அவருடைய சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி, எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, கே.பி.கேசவன், கே.சாரங்கபாணி, காளி.என்.ரத்தினம், டி.ஆர்.பி.ராவ், கே.கே.பெருமாள் போன்ற தலைசிறந்த நடிகர்கள் எல்லாம் இந்தக் குருகுலத்தில்தான் கல்வியும், கலைகளும் கற்றுத் தேர்ந்து புகழ்பெற்று விளங்கினர்.

அன்றைய நாளில் சச்சிதானந்தம் பிள்ளையின் 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி' கலை ஆர்வம் கொண்ட பல இளைஞர்களின் சரணாலயமாகத் திகழ்ந்தது.

உள்துறை இணை அமைச்சர் : இனவெறி தாக்குதல்களை மன்னிக்க முடியாது ! கடும்விளவு சந்திக்க நேரிடும் !

தொடரும் தாக்குதல் சம்பவங்கள்! மத்திய அரசு பொறுத்துக்கொள்ளாது என கிரண் ரெஜ்ஜூ எச்சரிக்கை! ;இந்தியாவில் இனவெறித் தாக்குதல்கள், வன்முறை சம்பவங்களை மத்திய அரசு பொறுத்துக்கொள்ளாது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரெஜ்ஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.;அரியானா மாநிலம் குர்கானில் வடகிழக்கு மாநிலமான நாகலாந்தை சேர்ந்த இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை குர்கான் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கிரண் ரெஜ்ஜூ ஆலோசனை மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா ஜனநாயக அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நாடு. இங்கு தேசிய ஒருமைப்பாடு மற்றும் பொதுமக்களின் ஒற்றுமை மீது எவ்வித தாக்குதல் நடந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக இன ரீதியான தாக்குதல், சம்பவங்கள் எந்த வழியில் நிகழ்த்தப்பட்டாலும், அவற்றை அரசு ஏற்றுக் கொள்ளாது என்றார். nakkheeran,in