திங்கள், 21 நவம்பர், 2016

மீண்டும் வெள்ளம் ? கோமாவில் தமிழக அரசு! பேரழிவுக்கு தயாரா?


அரைமணி நேரம் விடாது மழை பெய்தால் அரை அடிக்கு  மழைநீர் தேங்கிவிடுகிறது. இதுதான் இன்றைய சென்னையின் உண்மை நிலை. வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக வானிலை மையம் அறிவிப்பதற்கு முன்னரே, “பருவமழையை சந்திக்கத் தயாராக இருப்பதாக’ அறிவித்தது சென்னை மாநகராட்சி.
100 ஆண்டுகள் பெய்யாத பேய் மழை, தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மூன்றே நாட்களில்  பெய்ததால்தான் யாரும் எதிர்பார்க்காத வெள்ளத்தில் மக்கள் சிக்கித்தவித்ததாக ஜெ. அரசு கடந்த ஆண்டு காரணம் கூறியது.
வானிலை மையம் அறிவுறுத்தியும் எந்தவித மான முன்ஏற்பாடுகளும் செய்யாமல் இருந்ததாலும், செம்பரம்பாக்கம் ஏரியை எந்தவிதமான முன்னறி விப்பும் இன்றி இரவு நேரத்தில் திறந்துவிட்ட தாலும்தான் பலநூறு பேர் மரணமடைந்தனர், லட்சக்கணக்கான மக்கள் ரொம்பவே நொந்து போயினர்.

தமிழகத்தில் மெகா கூட்டணிக்கு அச்சாரம்.. திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கம்யுனிஸ்டுகள் முஸ்லீம் லீக்....

காங்கிரஸ் நடத்திய, இந்திரா நுாற்றாண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கில், லோக்சபா தேர்தலுக்கு, தமிழகத்தில் மெகா கூட்டணிக்கு அச்சாரம் போடும் வகையில், தலைவர்கள் பேசியது பரபரப்பைபை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காங்., சார்பில், நேற்று முன்தினம், சென்னை யில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் நுாற்றாண்டு விழா கருத்தரங்கம் நடந்தது. இதில், கூட்டணி மேடையாக அலங் கரிக்கும் வகையில், தி.மு.க., விடுதலை சிறுத் தைகள், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் பங்கேற்றன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், காதர் மொய்தீன் பேசுகையில், ''மத்திய அரசு, பொது சிவில் சட்டம் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இது, இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ் நிலையை ஏற்படுத்தும். ராகுல் பிரதமராகும் சூழல் உருவாகியுள்ளது; நாங்கள் காங்கிரசோடு இணைந்து பணியாற்றுவோம்,'' என்றார். வி.சி., தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''காங் கிரஸ் ஆட்சிக்கு வரவும், ராகுல் பிரதமராகவும், மத்திய அரசு வாயிலை திறந்து விட்டுள்ளது. காங்கிரசை ஆட்சி அரியணையில் ஏற்ற, இந்த மேடையில் இருக்கும், அணிகள் தொடரும்,'' என்றார்.

மம்தா பானர்ஜி : புதிய ரூபாயில் வங்க புலிகள் இல்லையே .. தாமரை யானை மயில் மட்டும்தான் ..


Where is Royal Bengal Tiger in Rs 2000 note? asks Mamata கொல்கத்தா: புதிய 2000 ரூபாய் நோட்டில் வங்கப் புலியின் படம் இடம் பெறாமல் போனது ஏன் என்று கேட்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
இது தற்செயலாக விடுபட்டதா அல்லது வேண்டும் என்றே விட்டு விட்டு டிசைன் செய்தார்களா என்றும் அவர் கேட்டுள்ளார். இதுகுறித்து மமதா பானர்ஜி கூறுகையில், சுந்தரவனக் காடுகள் குறித்தும், ராயல் பெங்கால் டைகர் குறித்தும் உலகத்துக்கே தெரியும். புதிய 2000 ரூபாய் நோட்டில், இதை எப்படி விட்டார்கள் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். யானை இருக்கிறது. ஆனால் புலி இல்லை.
யானையை தேசிய பாரம்பரியம் என்று சொல்வார்கள். ஆனால் தேசிய விலங்கு குறித்து அவர்கள் கவலைப்படவில்லை என்றார் மமதா.
மமதா கூறுவது புதிய 2000 ரூபாய் நோட்டில் யானை இருக்கிறது. மயில் இருக்கிறது. ஏன் தாமரை கூட இருக்கிறது. ஆனால் புலி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. tamiloneindia.com

ரஜினியின் பாராட்டு:பாஜக மகிழ்ச்சி!


minnambalam.com : ரூபாய் 500, 1000 நோட்டுகளை ஒழிப்பதாக வெளியான அறிவிப்புக்கு முதல் வரவேற்பு தந்தவர்களே திரைத்துறையினர்தான் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியிருக்கிறார். அவர் யாரை குறிப்பிடுகிறார் என்று நாம் விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், இதன் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. பிரதமர் மோடி, கடந்த 8ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். சட்டைப் பையிலே வெறும் ரூபாய் ஐநூறு நோட்டு இல்லாதவன்கூட இந்த அறிவிப்பை கேட்டு கதி கலங்கிப் போனான் என்பதுதான் உண்மை. ஆனால், மோடி அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களிலே நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு நான் தலை வணங்குகிறேன். புதிய இந்தியா பிறந்துள்ளது” என்று வர்ணித்து வாழ்த்து தெரிவித்தார்.

மக்களைக் கொல்ல வந்த ஆயுதம்: மம்தா!


minnanmbalam.com :பணம் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மற்ற தலைவர்கள் காட்டாத எதிர்ப்பை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காட்டிவருகிறார். இது, காங்கிரஸ் இடதுசாரிகளையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. மோடியின் ஆட்சியை எப்போதுமே விமர்சித்துவருகிறவர்களாக காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இருந்தாலும், இந்த விவகாரம் தொடர்பாக நாடு தழுவிய எதிர்ப்பியக்கம் கட்ட வேண்டும் என மம்தா பானர்ஜி நினைக்கிறார். ஆனால் அவரது முயற்சிக்கு இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியினரும் போதுமான ஆதரவை கொடுக்காதநிலையில் சளைக்காமல் போராடுகிறார் மம்தா பானர்ஜி.

வேந்தர் மூவிஸ் மதன் கைது..நீதிபதி முன் ஆஜார் !

மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த புகாரில் தேடப்பட்டு வந்த வேந்தர் மூவிஸ் மதன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார். காவல்துறை ஆணையர் ஜார்ஜ் இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்று மாலை நீதிமன்றத்தில் மதன் ஆஜர்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.thetimstamil.com
நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்த மதன் அழைத்துச்செல்லப்பட்டார் ( படங்கள் பண மோசடி வழக்கில் கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த வேந்தர் மூவிஸ் மதன் நேற்று இரவு திருப்பூரில் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், அனுப்பூர்பாளையம் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி பகுதியில் நேற்று இரவு 11 மணி அளவில் சென்னையில் இருந்து சென்ற போலீசார் வேந்தர் மூவிஸ் மதனை கைது செய்தனர். இந்த தகவல் யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த போலிசார், இரவோடு இரவாக மதனை சென்னைக்கு அழைத்து வந்தனர். நக்கீரன் 

அநீதி கதைகள் ... பெயரிலேயே புரட்சி ... வாழ்த்துக்கள்

வாழ்த்துகள் தியாகராஜா குமாரராஜா... அநீதி கதைகள் என்கிற தலைப்பே
வஸீகரமாக, சிறப்பாக இருக்கிறது. ஆனால் அதுதான் இறுதி செய்யப்பட்ட தலைப்பா என்று தெரியவில்லை. தமிழில் நல்ல சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒன்று ஆறு ஆண்டுகள் கழித்து மின்ன தொடங்கியிருக்கிறது. வாழ்த்துகள் தியாகராஜா குமாரராஜா. அருண் மோ

சுபவீ :மோடியின் கோமாளித்தடை

நான் பிரதமர் ஆனவுடன் வெளிநாட்டில் பதுக்கியுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டு வந்து, ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் 15 இலட்ச ரூபாயைப் போட்டுவிடுவேன் - என்று முன்பு நாடகமாடினார் மோடி.  என்னால் வெளிநாட்டுக் கருப்புப் பணத்தைக் கொண்டு வரமுடியவில்லை. ஒரே நாளில் கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவைகளாக அறிவித்தார் இன்று. கருப்புப் பணம் என்பது பதுக்கி வைக்கப்படும் பணம் மட்டும் இல்லை. நிலம், தங்கம், அறக்கட்டளை, போதைப் பொருள் என வெவ்வேறு வடிவங்கள் அதற்கு உண்டு. கார்ப்பரேட் முதலாளிகளின் நலம் காக்க, இவைகளில் கைவைக்காமல் 500-1000 ரூபாய்களைத் தடைசெய்து இருப்பது மோடியின் வேலைகளுள் ஒன்று. இதன் விளைவு சிறு தொழில்கள், கடைகள், சிறு வணிகம், போன்றவைகளிலும், மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

நவம்பர் 8 இரவில் 500 மற்றும் 1000 நோட்டுகளை மாற்றிய அமித் ஷாவின் நெருக்கமானவர்கள்!

முன்னாள் சகா மோடிக்கு எழுதிய பகிரங்க கடிதம். (தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்) யாதின் ஒசா. இவர் பிஜேபியின் குஜராத் எம்.எல்.ஏ மட்டுமல்ல; மோடி முதல்வராயிருந்தபோது அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்தவர். அவர் மோடியின் கருப்புப் பண எதிர்ப்பு நடவடிக்கை மக்களை முட்டாள்களாக்கும் செயல் என்று கடுமையாகச் சாடியிருக்கிறார். நவம்பர் 8 இரவு 9 மணியிலிருந்து அடுத்த நாள் அதிகாலை 5 மணி வரை, குஜராத்தில் பிஜேபிக்கு நெருக்கமானவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கூட்டுறவு வங்கிகளிலிருந்தும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டன என்றும் குற்றம்சாட்டுகிறார்.
 நவம்பர் 8 இரவிலிருந்தே பிஜேபியின் தேசியத்தலைவர் அமித் ஷாவுக்கு நெருக்கமானவர்கள் பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறும் இவர், அதற்கு தன்னிடம் வீடியோ ஆதாரம் இருக்கிறதென்கிறார். தான் கூறுவது தவறென்று நிருபிக்கும்படி பிரதமர் மோடிக்கு சவால் விடுகிறார்.

வார்டில் இருக்கும் ’ஜெ’ விடம் கேளுங்கள்:ஸ்டாலின்!

சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி-பதிலின் தொகுப்பு இது.
கேள்வி: ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுவது பற்றி உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ?
ஸ்டாலின்: தலைவர் கலைஞர் அவர்கள், ரூபாய் நோட்டுகள் இல்லாமல் தமிழக மக்கள் தவித்துவரும் நிலையில், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவித்திருக்கிறார். நானும் திமுக இளைஞரணி சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். அதில், தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் 24ஆம் தேதி, மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை நடைபெறவுள்ள மனிதச் சங்கிலி போராட்டத்தில் திமுக இளைஞரணியினர் பெருந்திரளாக பங்கேற்று, அந்தப் போராட்டம் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறேன்.

ஏழைகளுக்காக போராடுவேன்:மோடி ஆவேசம்!

ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி அறிவித்த பின்னர் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த மோடி நாடு திரும்பியதும் கோவாவில் நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்றார்.பின்னர் சில கூட்டங்களில் பங்கேற்றவர் உத்திரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மோடி பங்கேற்காத நிலையில் அவை முடங்கிக் கிடக்கிறது. நாளை அவை மீண்டும் கூட விருக்கும் நிலையில் தன்னை விமர்சிக்கும் தலைவர்களை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் மோடி. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், ஏழை மக்கள் நன்மை அடைவர் என மோடி கூறியிருக்கிறார்.அடுத்த ஆண்டு 2017இல் உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு கட்சிகளும் ஆளுக்கொரு யாத்திரையை அங்கு நடத்திவரும் நிலையில், பாஜக ’பரிவர்த்தன் யாத்திரை’ என்ற பெயரில் ஒரு யாத்திரையை நடத்தி வருகிறது.

உபி ரயில் விபத்து ..120 பேர் மரணம் .. 200 மேற்பட்டோர் காயம் . 85 பேர் பலத்த காயம்

புக்ராயன்:உத்தர பிரதேச மாநிலத்தில், இந்துார் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட கோர விபத்தில்,120 பேர் உயிரிழந்த னர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மத்திய பிரதேசம் மாநிலம் இந்துாரில் இருந்து, பீஹார் மாநிலம் பாட்னாவுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், உ.பி.,யின் கான்பூருக்கு அருகே உள்ள புக்ராயன் பகுதியில்,நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் திடீரென தடம் புரண்டது. இதில், ரயிலின், 14 பெட்டிகள் கவிழ்ந்தன. ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் நடந்த மிக கோரமான இந்த ரயில் விபத்தில், 120 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; அதில்,75 பேர் பலத்த காயமடைந்தனர். காயம டைந்த பலரது நிலைமை மோசமாக இருப்ப தால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.

நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ்வரன் தற்கொலைக்கு அதிமுக அமைச்சர்தான் காரணம்! லஞ்ச வசூலுக்கு நெருக்கடி கொடுத்தார்~

aruppusuicide
சென்னை: அருப்புக்கோட்டையில் நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ்வரன் தற்கொலைக்கு தென்மாவட்ட அமைச்சர் ஒருவரின் நெருக்கடியே காரணம்தான் என்று அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.
திருநெல்வேலியில் கடந்த ஆண்டு வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டார். பணிநியமனங்கள் தொடர்பாக அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொடுத்த நெருக்கடியால்தான் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்பட்டது. இதையடுத்து அக்ரிகிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். தற்போது இதே போன்ற சம்பவம் அருப்புக்கோட்டையில் நடந்துள்ளதாக அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஞாயிறு, 20 நவம்பர், 2016

மனோகர் பரிக்கர் :ஏ.கே. 47 வைத்திருப்போர் சுட்டுக் கொல்லப்படுவர்! ஆனா RSS காரய்ங்க மட்டும் வச்சுருக்கலாம்ல?

நாட்டின் நலன் கருதி ஆளும் மத்திய அரசு, பல அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறது என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர். கோவாவில் பாரதிய ஜனதா தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மனோகர் பாரிக்கர், ‘ஏ.கே.47 ரக இயந்திரத் துப்பாக்கியை வைத்திருப்பவர்களை சுட்டு வீழ்த்த பாதுகாப்புப் படைகளிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். இதை வைத்திருப்பவர்களுக்கு நல்ல நோக்கம் எதுவும் இருக்க முடியாது. அவர்களால் நிச்சயம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தீங்கு ஏற்படுவது உறுதி.

நிர்மலா சீதாராமன் :மத்திய அரசு மக்களுக்கு எதிரானதல்ல..



ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை மக்களுக்கு எதிரானது அல்ல. இதுகுறித்து, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சி செய்துவருகிறது என்று, மத்திய அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். அதேநேரம், குறைவான மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் சில பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.

ரூபாய் நோட்டு தடை விவகாரத்தில் மறு ஆய்வு..மோடி அறிவிப்பு

ரூபாய் நோட்டு தடை விவகாரம் தொடர்பாக மறுஆய்வு செய்து உரிய மாற்றங்களை செய்வேன் என்று மோடி உறுதி அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் ஆக்ராவில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
கான்பூர் அருகே இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு பலர் உயிர்பலியாகி உள்ளனர். அங்கு மீட்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இந்த விபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காய்மடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்.

ரகுராம் ராஜன் : நோட்டுக்களை மாற்றுவதால் கறுப்பு பணத்தை ஒழிக்கமுடியாது!

ரகுராம் ராஜன்மும்பை:  கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாகப் பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லா காகிதம் என அறிவித்த நிலையில். மத்திய அரசு கொடுத்துள்ள 50 நாட்களுக்குள் தங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கி மற்றும் தபால் நிலையங்களில் காத்துக்கிடக்கின்றனர். சரி மோடியின் அறிவிப்பு குறித்து நம் எல்லோருக்கும் பிடித்த முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் என்ன கூறுகிறார்." மத்திய அரசின் இந்த அறிவிப்பு சரியானது எனக்கு நம்பிக்கையில்லை. நாட்டின் கருப்புப் பணத்தைக் களைவதற்காகப் பழைய ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்கிவிட்டு புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வது சரியான தேர்வில்லை. இந்தியாவில் இதுவரை அறிவிக்கப்பட்ட இத்தகைய திட்டங்கள் மக்கள் மத்தியில் இருக்கும் கருப்புப் பணத்தை முழுமையாகக் களையும் வகையிலும், எப்படிக் கணக்கில் காட்டப்படாத பணம் கிடைத்தது என்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்கவும் ஏதுவாக இருந்தது.

RSS ஆடிட்டர் குருமூர்த்தி :மக்களின் சிரமம் தவிர்க்க முடியாது..மக்களின் ஆதரவு பாராட்டதக்கது

புதுடில்லி: ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையில் மக்களின் சிரமங்கள் தவிர்க்க முடியாதது என பொருளாதார நிபுணர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிரான பிரதமர் மோடியின் அதிரடி நடவடிக்கை தொடர்பாக அவர் தொலைகாட்சி ஒன்றிற்கு விரிவான பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் குருமூர்த்தி பேசிய முக்கிய அம்சங்கள்: ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி எடுத்துள்ள நடவடிக்கை முன்னெப்போதும் எடுக்கப்படாத, மிகுந்த ஆபத்துகள் நிறைந்த அரசியல் முடிவு. இந்த நடவடிக்கை ஊழல், கறுப்பு பணம், கள்ள நோட்டு ஆகியவற்றிற்கு எதிரானது. தேச பாதுகாப்புடன் தொடர்புடையது.இது திடீரென எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்டு மிக ரகசியமாக எடுக்கப்பட்டுள்ளது.
சிரமங்கள் தவிர்க்க முடியாதது

500 ரூபாய் நோட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு தளர்த்தலாம்?

ஆக்ரா: ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டத்தை மறு ஆய்வு செய்யவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளது பல்வேறு எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. என்ன மாதிரியான மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில் ரூ. 500 மற்றும் 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்திருந்தார். இதை மாற்றிக் கொள்ள அவகாசம் அளித்தும் அவர் அறிவிப்பு வெளியிட்டார். அன்று முதல் ஏகப்பட்ட குழப்பங்களை நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர். இதை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியும், பிற வங்கிகளும் எடுத்து வருகின்றன. என்றாலும் போதிய அளவு 100 ரூபாய், 50 ரூபாய் உள்ளிட்ட ரூபாய் நோட்டுக்கள் இருப்பில் இல்லாததால் பெரும் குழப்பமே நிலவி வருகிறது. இந்த பிரச்சினையை இப்போதைக்கு சரி செய்ய முடியாது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உண்மை நிலவரத்தை அம்பலப்படுத்தி விட்டார்.

சிதம்பரம் எச்சரிக்கை :இது முதல் கட்டம்தான். இரண்டாம் கட்ட விளைவுகளும் உண்டு!


காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
கேள்வி:– ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து?
ப.சிதம்பரம் பதில்:– நாட்டில் புழக்கத்தில் இருந்து, 86 சதவீத ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற்றதால், ஏற்படக்கூடிய முதல் கட்ட விளைவுகளை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்த முதல் கட்ட விளைவுகள், இப்போது முதல் இன்னும் பல வாரங்கள் தொடரும். அதன்பின்னர் இரண்டாவது கட்ட விளைவுகளை நீங்கள் பார்க்கலாம். மத்திய அரசின் நடவடிக்கையில் எனக்கு எழுந்துள்ள ஒரு சந்தேகம், அவர்கள் அரசில் உள்ள அறிவார்ந்த பொருளாதார நிபுணரான டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியனை கலந்து ஆலோசிக்கவில்லையோ என்பதுதான். எதிர்மறை விளைவுகள்
கேள்வி:– முதல் கட்ட விளைவுகள், 2–ம் கட்ட விளைவுகள் என சொல்வது? பதில்:– மிகக் குறைந்த பணத்துடன் இப்போது நிறைய மக்கள் வாழுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர்களிடம் நுகர்வு இல்லை.

20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் மரணம்: ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி !

கோவையில் 20 ஆண்டுகளுகளுக்கும் மேலாக 20 ரூபாய் கட்டணம் மட்டுமே பெற்று, மருத்துவம் பார்த்து வந்த 'மக்கள் டாக்டர்' என அழைக்கப்படும் பாலசுப்பிரமணியம் காலமானார். அவருக்கு வயது 67. கோவை ராஜகணபதி நகரை சேர்ந்தவர் மருத்துவர் பால சுப்பிரமணியம். இவர் கோவை ஆவாரம்பாளையம் சாலையில் சிறிய அறையில் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்தார். இவரின் மருத்துவமனையை சுற்றியுள்ள ஆவரம்பாளையம், நேதாஜிநகர், அண்ணாநகர் போன்ற பகுதியில் மட்டுமல்லாமல் மாநகரத்தில் உள்ள பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் வைத்தியம் பார்க்க வருவார்கள். இரண்டு ரூபாயில் வைத்தியம் பார்த்து வந்த இவர், கடைசியாக கடந்த சில வருடங்களாக 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்தார். இதனால் பிற மருத்துவர்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். மேலும், பல இடையூறுகளை சந்தித்து வந்தார். இருப்பினும் தன்னுடைய மருத்துவ சேவையை காசாக்க விரும்பவில்லை. மேலும், நோயாளிகளுக்கு ஊசி, மருந்து போன்றவற்றை இலவசமாக வழங்குவார். பல நேரங்களில் நோயாளிகளின் ஏழ்மை நிலையறிந்து அந்த இருபது ரூபா கட்டணம் கூட பெறாமல் வைத்தியம் பார்ப்பார். கடந்த இருபது ஆண்டுகளில் ஒருநாள் கூட தனது மருத்துவமனைக்கு வராமல் இருந்ததில்லை.

அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு .. விடுதலை சிறுத்தைகள் புதுவையில் .. திருமாவளவன் அறிவிப்பு!

அம்பேத்கரின் 60-வது நினைவு தினத்தை முன்னிட்டு விசிக சார்பிலான அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு புதுவையில் டிசம்பர் 6-ம் தேதி நடக்கவுள்ளது என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மத்தியில் ஆளும் பாஜக அரசு கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் அழிப்பதாகச் சொல்லிக்கொண்டு ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் ‘பொருளாதார அவசர நிலையை’ நடை முறைப்படுத்திக்கொண்டிருக்கிறது. உழைத்து சம்பாதித்த பணத்தை எடுப்பதற்கே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். இத்தகைய கொடுமை ராணுவ சர்வாதிகார ஆட்சிகளில்கூட நடந்ததில்லை.

2.5 லட்சத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

டெல்லி: செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பழைய 500,1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து பொது மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். டெபாசிட் செய்வதற்கு உச்ச வரம்பு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ரூ 2.5 லட்டத்திற்கு மேல் டெபாசிட் செய்வர்கள் கட்டாயம் பான் எண், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வங்கியில் சமர்பிக்க வேண்டும். இந்த நிலையில் இரண்டரை லட்சம் ரூபாயைத் தாண்டி யாரெல்லாம் டெபாசிட் செய்கிறார்களோ அவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

உபி ரயில் விபத்து உயிரிழப்பு 45 ஆக உயர்ந்தது.. 14 பேட்டிகள் தடம் புரண்டது

பாட்னா: உத்தரபிரதேச மாநிலம் கான்பூர், புகாரியன் அருகே, பாட்னா-இந்துார் விரைவு ரயில் இன்று (20-11-16) அதிகாலை 3 மணிக்கு தடம் புரண்டதில் உயிரிழப்பு 45 ஆக உயர்ந்தது. மேலும் பலர் காயமடைந்தனர். தடம் புரண்ட 14 பெட்டிகள் 14 பெட்டிகள் தடம் புடண்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்தமாநில அரசு மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவ்வழியாக வரும் மற்ற ரயில்கள் வேறு தடஙகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. அகிலேஷ் உத்தரவு: தகவல் அறிந்த மாநில முதல்வர் அகிலேஷ், மீட்பு பணிகளை உடனே மேற்கொள்ளுமாறு டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார்.

மத்திய அரசை கண்டித்து 24-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் .. கலைஞர் அறிவிப்பு !

சென்னை, மக்கள் அவதிக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் 24-ந்தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று கலைஞர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- மக்கள் அவதி மத்திய பா.ஜ.க. அரசு, “அவசரக்கோலத்தில் அள்ளித்தெளி” என்பதைப் போல எந்தவிதமான முன்னேற்பாடோ, உரிய வகையிலான திட்டமோ இல்லாமல், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென்று 8-11-2016 அன்று மாலையில் செய்த அறிவிப்பின் காரணமாக கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மக்கள் படும் துன்ப துயரங்களுக்கு அளவே இல்லை. ஏழையெளிய மக்கள், அன்றாடங் காய்ச்சிகள், வேலைகளுக்கும் செல்ல முடியாமல், தங்களிடம் உள்ள ஒரு சில ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் முன்னால் பல மணி நேரங்கள் “கியூ”வில் நிற்கின்ற கொடுமைகள் குறைந்தபாடில்லை.