
minnambalam,com :தமிழகத்தில்
தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் பொதுத் தேர்தலும், திருப்பரங்குன்றம்
தொகுதியில் இடைத்தேர்தலுமாக 3 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த முறை நடந்த பொதுத் தேர்தலின்போது தஞ்சை,
அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது
தொடர்பாக எழுந்த புகாரினைத் தொடர்ந்து தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக - எம்எல்ஏ சீனிவேல், பதவி
ஏற்புக்கு முன்னரே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

















