செவ்வாய், 1 டிசம்பர், 2015

கடும்மழை ..சென்னை தனித்தீவு போல காட்சி அளிக்கிறது

சென்னை: கடந்த 24 மணிநேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்துள்ளது. தகவல் தொடர்பு சாதனங்கள், போக்குவரத்து வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், தனித்தீவாக மாறியுள்ளது . மின்சார வசதியும் நிறுத்தப்பட்டுள்ளதால் எவ்வித உதவியும் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். நகரமே ஸ்தம்பித்துள்ளது.
சென்னையில் காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. போரூர்- வடபழநி சாலையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. நுங்கம் பாக்கம், வள்ளுவர்கோட்டம், அமைந்தகரை சாலைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கிண்டி வேளச்சேரி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சராசரிக்கு 50 சதவீத அதிக மழை

தமிழகத்தில் இன்று வரை பெய்துள்ள மழை சராசரியை காட்டிலும் 50
சதவிதம் அதிகமாக உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யுமென்றும் சென்னை வானில மைய இயக்குனர் ரமணன் குறிப்பிட்டார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை மீண்டும் கனமழை பெய்ய துவங்கியுள்ள சூழலில், வெள்ளப் பாதிப்புகளிலிருந்து ஏற்கனவே சிக்கித்தவித்த பொது மக்கள், மீண்டும் புதிய பிரச்சனைகளில் சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ள எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. bbc.tamil.com

ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான வர்த்தகத்தை பாதுகாக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது: புதின் குற்றச்சாட்டு

லே போர்கேட், ரஷியாவின் போர் விமானம் ஒன்று தங்கள் வான்வெளியில் அத்துமீறி பறந்ததாகக்கூறி, அதை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் 2 சுட்டு வீழ்த்தின. இவ்விவகாரம் காரணமாக துருக்கிக்கும், ரஷியாவுக்கும் இடையேயான பனிப்போர் முற்றி உள்ளது. ரஷிய விமானம் தங்கள் வான்எல்லையில் அத்துமீறி நுழைந்தபோது, எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால்தான் சுட்டு வீழ்த்தியதாக துருக்கி கூறியது. ஆனால் எச்சரிக்கை விடப்படவில்லை என்று ரஷியா மறுத்தது. ரஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து, போர் விமானங்கள், ஏவுகணை தாங்கிய கப்பல்கள் என தனது ராணுவ பலத்தை சிரியாவை சுற்றிலும் ரஷியா அதிகரித்து உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது.

வீணான மழை நீர் கணக்கிடுவதில் சிக்கல்

வடகிழக்கு பருவமழையின் போது, வீணாக கடலில் கலந்த வெள்ள நீரை கணக்கிடுவதில், பொதுப்பணித் துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் இறுதியில் துவங்கிய வடகிழக்கு பருவமழை, தொடர்ந்து பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் சராசரியாக, 50 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, இயல்பு அளவை விட அதிகம். தமிழகத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் உள்ளிட்ட, 10 மாவட்டங்களில், சராசரி அளவை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. பல ஆண்டுகளாக
வறண்டு கிடந்த ஆறுகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பி, உபரி நீரை வெளியேற்றும் நிலை உருவாகி உள்ளது. அதே சமயம், வீணாக கடலில் கலந்த மழைநீரின் அளவை, துல்லியமாக கண்டறிய முடியவில்லை. நீர்நிலைகளில் தேங்கியதை விட, சாலைகளில் அதிகளவு மழைநீர் தேங்கியதே இதற்கு காரணம் .மழை நீரை சேமிக்க தடுப்பணைகள் கூட கிடையாது... பிறகு எப்படி வீணானது என்று சொல்ல முடியும்... அப்படிப்பார்த்தால் நீர் கடலுக்குத்தான் செல்கிறது...

சிறப்பு பூஜை: ஸ்டாலின் ஏற்பாடு!

தொடர் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டம், வெள்ள நிவாரணப் பணி என சுற்றித் திரிந்ததால், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. புத்துணர்ச்சி பெற மூலிகை சிகிச்சைக்காக, அவர் கேரளா சென்றுள்ளார்.தமிழகம் - கேரளா எல்லையில், களியக்காவிளைக்கு அருகில் உள்ளது பூவார்; இங்குள்ள பிரபல மூலிகை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் திட்டத்துடன், ஸ்டாலின், கேரளா சென்றுள்ளார். அங்கு, எட்டு நாட்கள் தங்கி, மூலிகை குளியல் உள்ளிட்ட, ஆயுர்வேத சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள உள்ளார். பின் அவர், திருவனந்தபுரம் அருகில் உள்ள, கரிக்காகோம் என்ற ஊருக்கு செல்கிறார். அங்குள்ள, சாமுண்டீஸ்வரி கோவிலில், ரத்த சாமுண்டிக்கு, சிறப்பு பூஜை செய்கிறார்; அங்கு, சத்ரு சம்ஹார யாகத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிரிகளிடமிருந்து காப்பதற்காக, இந்த பூஜை நடத்தப்படுகிறது. இதில், ஸ்டாலின், மனைவி துர்காவுடன் கலந்து கொள்கிறார் என, அவர் ஆதரவாளர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.- நமது நிருபர் - தினமலர்.com

தள்ளாடுது தமிழகம் ஊத்தி கொடுத்த வானம் ...தூத்துக்குடியின் அவலம்

tuticorin-flood-11மழை வெள்ளத்தில் தூத்துக்குடி – மயக்கத்தில் மாநகராட்சி!;வினவு
 மேற்கு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் தூத்துக்குடி மூழ்கியது. இக்காட்டாறு புதுக்கோட்டை ஓடையில் பாய்ந்து கோரம்பள்ளம் கண்மாயில் கலந்து உப்பாற்று ஓடை வழியாக வங்கக் கடலுக்கு செல்லும். ஆனால் இந்த ஓடை ஆக்கிரமிக்கப்பட்டதால் உடைப்பெடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மூழ்கடித்தபடி, தூத்துக்குடி திருநெல்வேலி நெடுஞ்சாலையை துண்டித்துக்கொண்டு குடியிருப்பு பகுதிகளை கபளீகரம் செய்தது.
கோரம் பள்ளம் கண்மாயின் கரைகளை பலப்படுத்த தவறியதால் அதில் உடைப்பு ஏற்பட்டது. அதேபோல் உப்பாற்று ஓடையும் ஆக்கிரமிக்கப் பட்டதால் அதிலும் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையை துண்டித்துக்கொண்டு முத்தையாபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளை கபளீகரம் செய்தது.

விஜயகாந்த் :India Today ஆங்கில பத்திரிகைகளின் ஆய்வு குறித்து அரசு மௌனம் சாதிப்பது ஏன்?

தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆங்கிலப் பத்திரிகை இதழ் ஒன்றின் ஆய்வு குறித்து மவுனம் சாதிப்பது ஏன்? கடந்த காலங்களில் தனக்கு சாதகமாக வந்த பத்திரிகைகளின் ஆய்வுகள் குறித்து, சட்டமன்றத்தில் பெருமை பேசியவர் தற்போது இதை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என்று சட்ட மன்றத்திலும், தேர்தல் பிரச்சாரத்திலும் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆங்கிலப் பத்திரிகை இதழ் ஒன்றின் ஆய்வு குறித்து மவுனம் சாதிப்பது ஏன்? கடந்த காலங்களில் தனக்கு சாதகமாக வந்த பத்திரிகைகளின் ஆய்வுகள் குறித்து, சட்டமன்றத்தில் பெருமை பேசியவர் தற்போது இதை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?அதிமுக அரசின் மோசமான செயல்பாடுகள் குறித்து வெளிவந்துள்ள செய்திகளின் மூலம், தமிழகம் அனைத்து துறைகளிலும் மிகவும் பின்தங்கியுள்ளது என்பது வெட்டவெளிச்சமாக தெரியவந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்: மூவர் குழு திடீர் ஆய்வு

தேனி: முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளதால் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என கண்காணிப்புக் குழு தலைவர் நாதன் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க, மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் நாதன் தலைமையில் மூவர் கொண்ட கண்காணிப்பு குழுவை நியமித்தது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 138 அடியைத் தாண்டியுள்ளது. 3 member deputy team inspects in mullai periyar dam எனவே அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயரும்போது செய்யப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், உபரி நீரை வெளியேற்றுவதற்கு ஏற்ப அணையின் மதகுகளை சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளுக்காக துணைக் காண்காணிப்பு குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக அணையை ஆய்வு செய்து வருகின்றனர். எந்தா  சேட்டா அவ்விட  வெள்ளம் வளர ஆபத்தானோ?  பின்னே?

மதரசா பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை நடப்பதாக பிரபல திரைப்பட இயக்குனர் அலி அக்பர் பரபரப்பு புகார்


Director Ali Akbar reavals his experience that he is also a victim of sexual abuse in Madrasa திருவனந்தபுரம்: கேரளாவில் மதரசா எனும் இஸ்லாமிய பள்ளிகளில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நிகழ்வதாக, பிரபல திரைப்பட இயக்குனர் அலி அக்பர் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் மதராசா எனும் இஸ்லாமிய உள்ளன. அவற்றில் சுமார் 3.5 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் உள்ள மதரசா பள்ளிகளில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடப்பதாக பிரபல திரைப்பட இயக்குனர் அலி அக்பர் திடுக்கிடும் புகாரை கூறியுள்ளார். மதரசா பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு அங்கு இருக்கும் மதகுருமார்கள் பாலியல் தொல்லை தருவதாக அவர் குற்றம்சாட்டினார். Filmmaker Ali Akbar Alleges Sex Abuse in Kerala Madrasa மதம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இந்த விவகாரத்தை யாரும் வெளியில் சொல்வதில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பு வயநாட்டில் உள்ள மதரசாவில் தனக்கு இக்கொடுமை நடந்ததாகவும் இயக்குனர் அலி அக்பர் குறிப்பிட்டார்.

திங்கள், 30 நவம்பர், 2015

தயாநிதி மாறனிடம் 6 மணிநேரம் சி.பி.ஐ. விசாரணை 700 டெலிபோன்...எக்சேஞ்ச் வழக்கு.....

டெல்லி: சட்டவிரோத டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று 6 மணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். 2004- 2007ஆம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது 700-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்று சன் டி.வி. ஒளிபரப்புக்குப் பயன்படுத்தினார் என்பது வழக்கு. இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கில் தயாநிதி மாறனை கைது செய்யவும் காவலில் வைத்து விசாரிக்கவும் சி.பி.ஐ. அனுமதி கோரியிருந்தது. ஆனால் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் கைது நடவடிக்கையில் இருந்து தயாநிதிமாறன் தப்பினார்.

வங்காளதேசம்: கலீஜா ஜியாவுக்கு ஜாமீன்..ஊழல்வழக்கு..70 வயது எதிர்கட்சி தலைவர் Begum Khaleda Zia

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா(வயது 70). வங்காளதேச தேசியவாத கட்சியின் தலைவர். தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இவர் மீது பல ஊழல் வழக்குகள் உள்ளன. இவர் பிரதமராக இருந்தபோது ஒரு கனடா கம்பெனிக்கு எரிவாயு வயலை குத்தகைக்கு விட்டதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு காண்டிராக்ட் விட்ட வகையில் நாட்டுக்கு ரூ.13,777 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கலிதா ஜியா வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த கோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் கோர்ட்டு உத்தரவு கிடைத்த 2 மாதத்திற்குள் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து இன்று அவர் டாக்காவில் உள்ள நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2040 ஆம் ஆண்டில் துணையைச் சந்திக்கும் “பர்ஸ்ட் டேட்” சாத்தியமே இல்லையாம்- சொல்கிறது ஆய்வு

லண்டன்: உலகில் காதலுக்காகவோ, நட்புக்காகவோ சக மனிதர்களுடன் முதல் முறையாக நேரடியாக சந்திப்பது வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் ஏட்டுகளில் மட்டுமே காணக் கிடைக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. தொழில்நுட்பத்தின் உச்சபட்ச முன்னேற்றத்தால் 2040 ஆம் ஆண்டு எழுபது சதவிகிதம் பேர் தனக்கு பிடித்த நபரை சந்திக்க விர்ச்சுவல் தொழில்நுட்பத்தைத்தான் நாடுவார்களாம். First dates in the real world could be history by 2040, research suggests 
இந்த வித்தியாசமான முடிவு லண்டனின் இம்ப்பீரியல் வர்த்தகக் கல்லூரியின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. துணையைத் தேட உதவும்: இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றம் நமக்கான துணையைத் தேட எளிதில் உதவும் எனவும் தெரியவந்துள்ளது. 

தமிழக அரசின் கோவனுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது

இடதுசாரிப் பாடகர் கோவனை தமிழகப் போலிஸ் காவலில் எடுப்பதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்ததற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை இந்திய உச்சநீதிமன்றம் இன்று திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
கோவன் விடுதலைக்கெதிராக தமிழக அரசின் மனு தள்ளுபடி கோவனை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்ராகிம் கலிஃபுல்லா மற்றும் யு.யு.லலித் ஆகியோரை கொண்டிருந்த அமர்வு முன்பாக நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் இந்த கோரிக்கையில், அவர்களுக்கு சாதகமான ஒன்றையும் காண முடியவில்லை என்று கூறிய அந்த அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மது ஒழிப்புப் பிரச்சாரப் பாடல்களைப் பாடி, தமிழக அரசால் கைது செய்யப்பட்டிருந்த இடதுசாரிப் பிரச்சாரப் பாடகர் கோவன், தன்னை போலீஸ் காவலில் எடுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். அதை எதிர்த்தே தமிழக அரசு தரப்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ராகுல் இரட்டை குடியுரிமை விவகாரம் : சுப்பிரமணிய சாமி மனு தள்ளுபடி..

 ராகுல் காந்தியின் குடியுரிமை விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என கூறி உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி, லண்டனில் இயங்கி வரும் பேக் காப்ஸ் என்ற கம்பெனி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பிரிட்டன் குடிமகன் என்று தன்னை குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறி ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த இரட்டை குடியுரிமை விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.nakkheeran,in    சு.சுவாமி  பேசாம கனிமொழிக்கு அல்லது வேற திமுககாரனுக்கு எதிரா ஏதாவது மனு கொடுங்க உடன நடவடிக்கை எடுப்பாய்ங்க....

நான் காதலித்தேன்.. நீங்களும் காதலியுங்கள்’ – சித்தாரா

‘‘நானும் காதலித்தேன். ஆனால் அது கல்யாணத்தை சென்றடையவில்லை. அது ஒரு மறக்கமுடியாத வசந்த காலம். எங்கள் இருவரின் தனிமையை பாதுகாக்க வேண்டியதிருப்பதால் இதற்கு மேல் அதை பற்றி பேசவிரும்பவில்லை. ஆனால் எல்லோரும் ஒருதடவையாவது காதலிக்கவேண்டும். காதல் அவ்வளவு அழகானது’’திருமணம் செய்யாததால்தான் இவ்வளவு அழகாக இருக்கிறீர்களா? ‘‘உடல் குண்டாகிவிடுவது எனக்கு பிடிக்காது. முன்பிருந்தே நான் உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்கிறேன். ஒரு சினிமாவுக்காக உடல் எடையை கூட்டினேன். இப்போது அதை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். எனது நீண்ட கூந்தல், அம்மாவிடம் இருந்து பாரம்பரியமாக எனக்கு கிடைத்தது’’ மீண்டும் உங்கள் வாழ்க்கையில் காதல் வருமா?

இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை!

சென்னை:'வங்கக்கடலில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், இன்று முதல், ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை, கடந்த சில நாட்களாக சற்று குறைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், 'தமிழகம், புதுச்சேரியில், இன்று முதல், ஐந்து நாட்களுக்கு, கனமழை நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.>இதுகுறித்து மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
தென் மேற்கு வங்கக்கடலில், இலங்கை அருகே நிலை கொண்டிருந்த காற்றுஅழுத்தத் தாழ்வு நிலை, அதே இடத்தில் நீடிக்கிறது.அதே நேரத்தில், தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமானில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.

ஞாயிறு, 29 நவம்பர், 2015

savukku:தேர்தலானாலும் சரி, வழக்குகளானாலும் சரி. ஒரு குமாரசாமி கிடைக்காமலா போய் விடுவார்

c30
தமிழக அரசியல் வரலாறை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு, ஆணவத்தின் மறுபெயர் ஜெயலலிதா என்பது நன்றாகவே தெரியும்.  எவ்விதமான தவறுகளை இழைத்தாலும் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்பதில் அவருக்கு அபார நம்பிக்கை உண்டு.   திமுகவின் மீது அப்படியொரு நம்பிக்கை அவருக்கு.   அவரது நம்பிக்கைக்கு ஏற்றவாறுதான், திமுகவும் பல்வேறு தவறுகளை இழைத்து, ஜெயலலிதாவை மீண்டும் மீண்டும் மகுடத்தில் ஏற்றி வருகிறது. 1991-1996 ஆட்சிக்கு பிறகு, ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது என்றே பலரும் கருதினார்கள்.   ஆனால் அந்த கருத்துக்களையெல்லாம் பொய்ப்பித்து, 1998ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலிலேயே 18 எம்.பிக்களை பெற்றார் ஜெயலலிதா.    தேர்தலானாலும் சரி, வழக்குகளானாலும் சரி.   ஒரு குமாரசாமி கிடைக்காமலா போய் விடுவார் என்ற அசாத்திய நம்பிக்கை அவருக்கு உண்டு.
2011ல் ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே இந்த ஆணவத் தொனி ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் வெளிப்பட்டது.  திமுகவின் திட்டங்களை ஒவ்வொன்றாக முடக்குதையே தனது முதல் நடவடிக்கையாக தொடங்கினார் ஜெயலலிதா.  அண்ணா நூற்றாண்டு நூலகம், தலைமைச் செயலகம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை படிப்படியாக முடக்கினார்.    அந்த கட்டிடங்களில் செய்யப்பட்டுள்ள கோடிக்கணக்கான முதலீடுகளைப் பற்றி ஜெயலலிதா துளியும் கவலைப்படவில்லை.   தலைமைச் செயலகம் கட்டுவதில் பெரும் ஊழல் நடந்திருக்கிறது என்று கூறி, முதல் பட்ஜெட்டிலேயே, அந்த கட்டுமான ஊழல் குறித்து விசாரிப்பதற்கென்று ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார்.   அந்த விசாரணை ஆணையத்தின் தலைவராக இருந்த நீதிபதி ரகுபதி, கடந்த நான்கரை ஆண்டுகளாக தெண்டச் சம்பளம் வாங்கியதைத் தவிர அந்த விசாரணை ஆணையத்தால் எந்தப் பயனும் நடைபெறவில்லை.

நெஸ்லே பாஸ்தாவில் அதிக காரியம்...அனுமதிக்கப்பட்ட 2.5 பி எம் விட என்ற 6 பி எம் அளவில்

இந்த  நெஸ்லே உரிமையாளர்கள்தான்  தண்ணீர் மனிதரின் அடிப்படைஉரிமைஇல்லை அதற்கு அரசுகள் வரி மற்றும் விலைகள்  விதிக்க வேண்டும் என்று கூறியவர். நெஸ்லே பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும் 
நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நூடுல்ஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ரசாயனப் பொருட்கள் இருந்தது தெரியவந்ததை அடுத்து பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்ற நூடுல்ஸ் நிறுவனம் அங்கீகாரம் பெற்ற ஆய்வு நிறுவத்திடம் ஆய்வு செய்யவில்லை எனக்கூறி தடையை நீதிமன்றம் நீக்கியது. பின்னர் உரிய பரிசோதனைகளுக்கு பின் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. இதை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு மீண்டும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாவ் பகுதியில் இருந்த கடையில் சேகரிக்கப்பட்ட நெஸ்லே நிறுவனத்தின் பாஸ்தா பாக்கெட்டுகள் தேசிய உணவு பரி‍சோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் நெஸ்லே நிறுவனத்தின் பாஸ்தாவில் அனுமதிக்கப்பட்ட காரீயத்தின் அளவான 2.5 பி.எம் என்பது 6 பி.எம். என்ற அளவில் உள்ளது.

மோடியின் தொகுதியில் கோக்க கோலா நிறுவனத்தால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு..வாரணாசியில் ..


பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியில் கோக்க கோலா நிறுவனம் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கோக கோலா நிறுவனம் கோக்க கோலா நிறுவனம் நிலத்தடி நீரை மிக அதிகமாக ஊறிஞ்சி எடுத்து குளிர்பானம் தயாரித்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது. தொடர்ந்து பல ஆண்டுகள் கோக்க கோலா நிறுவனம் நிலத்தடி நீரை ஊறிஞ்சி எடுப்பதால் நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. இதனால் இங்குள்ள 18 கிராம மக்கள் நிலத்தடி நீர் கிடைக்காமல் பெரும் அவதிப்படுகிறார்கள். விவசாயிகளின் கிணறுகளும், ஆழ்துளை கிணறுகளும் வறண்டு விட்டதால் நீர் இல்லாமல் விவசாயிகள் சாகுபடி செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

தேமுதிக தேவை இல்லை...கனிமொழி கலைஞரிடம் வேண்டுகோள்?

விஜயகாந்த் கருணையால் தான், தி.மு.க., தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில்லை; அவர் இல்லாமலேயே, தேர்தலை சந்திக்கத் தயாராவோம்' என, அக்கட்சியின் மகளிர் அணி செயலர் கனிமொழி, கட்சித் தலைவர் கருணாநிதியிடம் கூறிய தகவல் வெளியாகி உள்ளது. லோக்சபா தேர்தலில், காங்கிரசை கழற்றிவிட்ட தி.மு.க., தலைமை, தே.மு.தி.க.,வை இழுக்க முயற்சித்தது. ஆனால், போக்குக் காட்டிய விஜயகாந்த், கடைசி நேரத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தார்; அனைத்து இடங்களிலும் தோற்றார். வழக்கமாக தேர்தலில், 10 சதவீத ஓட்டுகளை பெறும் விஜய காந்த், 6 சதவீத அளவுக்கு சுருங்கினார். அதே போல, தி.மு.க.,வும், 30 சதவீதத்தில் இருந்து, 26 சதவீத ஓட்டுகளுக்கு சுருங்கியது. இதனால், சட்டசபை தேர்தலில், இரு கட்சிகளும் கூட்டணி சேர வேண்டும் என, தொண்டர்கள் விரும்பினர். அதன் மூலமே, ஜெயலலிதாவை வீழ்த்த முடியும் என்று கணக்குப் போட்டனர். இதற்காக, தே.மு.தி.க., தரப்பிடம் பேச்சு நடத்திய கனிமொழி, அது பலிக்காததால், விஜயகாந்த் மீது கடும் அதிருப்தியடைந்துள்ளார். பிரேமலதா திமுகவை மக்சிமம் வெறுப்பேற்றுவது அதிக சீட் பெறுவதற்கான தந்திரம்தான். இவிங்கள கண்டுக்காம விட்டாலே போதும் காணாம போயிடுவாங்க இதுவெறும் பலூன் கட்சிங்க...  

விஜயதரணி இளங்கோவன் மோதல்...தமிழகத்தில் காங்கிரஸ் சத்தம்தான் தற்போது ஹிட்....

சென்னை: தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியின் ஆதரவாளர்களின் சேலையை பிடித்து இழுத்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் ஆதரவாளர்கள் அவமானப்படுத்தியதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எங்கள் ஜாதியை சொல்லி திட்டியதாக விஜயதாரணி உள்ளிட்டோ மீது இளங்கோவன் ஆதரவாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இருதரப்பும் இப்படி கேவலமான புகார்களை தெரிவித்து போலீஸுக்கு போயிருப்பதால் எஞ்சிய காங்கிரஸின் மானமும் கப்பலேறுவதாக அக்கட்சி தொண்டர்கள் புலம்புகின்றனர். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் கோஷ்டி சண்டைகள் அகிலம் அறிந்த உண்மை.. இந்த சண்டையில் கிழியாத வேஷ்டிகளே இல்லை.. இதனையும் நாடறியும். இப்போது ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்கிற வகையில் நீங்க மட்டும் கோஷ்டி சண்டையில் இறங்க முடியுமா? உங்களைவிட கேவலமாக எங்களாலும் காங்கிரஸ் கட்சியை நாறடித்துவிட முடியும் என வரிந்து கட்டி களமாடி வருகின்றனர் விஜயதாரணி எம்.எல்.ஏ. தலைமையிலான கோஷ்டியும், இளங்கோவன் ஆதரவு மகளிர் கோஷ்டியும்...

யுவன் சங்கர் ராஜா :சகிப்பின்மையை நான் எதிர்கொண்டதே இல்லை

கோயமுத்தூர்: சகிப்பின்மை போன்ற நிலையை நான் உணர்ந்தது கிடையாது என்று யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இளையராஜாவின் மகனாக இருந்து முஸ்லிமாக சமீபத்தில் மதம் மாறியவர் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இன்று கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:  சகிப்புத்தன்மையற்ற நிலை, இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. எனவே, சகிப்பின்மை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. நாட்டில் சகிப்பின்மை நிலவுவதாக கூறி எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பிக் கொடுப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. கடந்த ஆண்டு நான் 14 படங்களுக்கு இசையமைத்தேன். எனவே ஓய்வு தேவைப்பட்டதால்தான், இந்த ஆண்டு படங்களை குறைத்துக் கொண்டேன். தம்பி யுவன் தாங்களோ  ரஹ்மானோ  இந்துவாக இருந்து முஸ்லிமானால் பிரச்சனை இல்லை ஆனால் உங்களை போன்றோர்  ஒரு முஸ்லிம் நாட்டில் பிறந்து இந்துவாக முடியுமா? கொஞ்சம் மனசாட்சியை கேட்டு பார்க்கவேண்டும் . மதவாதியாக இருக்க வேண்டியதில்லை ஆனால் கொஞ்சம் மனசாட்சியோடு சிந்திக்கவேண்டும் அப்பனே 

ரஷ்யா வான் தாக்குதல் சிரியாவில் 40 பேர் பலி...

ஈராக் மற்றும் சிரியாவில் சில இடங்களை பிடித்து வைத்துக்கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இருநாடுகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். அத்துடன் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். இதேபோல் சிரியாவில் அதிபருக்கும், உள்நாட்டு கிளர்ச்சியாளருக்கும் இடையிலும் சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் ரஷ்யா சிரியா அதிபருக்கு ஆதரவாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவும் விமான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இன்று கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வடமேற்கு சிரியாவில் உள்ள அரிஹாவின் முக்கிய நகரத்தில் உள்ள மார்க்கெட்டில் விமான தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்தது 40-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். ரஷ்ய விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் தப்பதித்த விமானியை பிடித்து சுட்டுக்கொன்றது சிரியாவின் கிளர்ச்சிப்படை. அதன்பிறகு ரஷ்யா தாக்கிய முதல் விமான தாக்குதல் இதுவாகும்.< சமீபத்தில் ரஷ்யா பயணிகள் விமானம் மற்றும் ஜெட் விமானத்தை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மாலைமலர்.com

தாய்லாந்தில் குரங்குத் திருவிழா...லோபு பூரியில் உண்டு மகிழ்ந்த குரங்குகள்


தாய்லாந்தில் இந்த ஆண்டும் குரங்குகளை போற்றும் வகையிலான திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவிழாவில் உண்டு மகிழும் குரங்குகள் லொப்புரி மாகாணத்தில் இந்த திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்லாந்தின் இந்த குரங்குத் திருவிழா சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கும் ஒரு நிகழ்வாகும். சில சமயங்களில் குரங்குகள் ஆட்களை கடிக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன இந்தத் திருவிழா நாளன்று அங்கு குரங்குகளுக்கு சீனர்களின் முறைப்படியான விருந்தோம்பல் நடைபெறுகிறது. இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான குரங்குகள் கூடி, உண்டு உறவாடி மகிழ்கின்றன.

தேர்தல் பிரச்சாரத்தில் சவுதி பெண்கள்

சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளை அந்நாட்டு பெண்கள் முதன் முறையாக ஆரம்பிதுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தலில் சவுதி பெண்கள் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளனர் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், சுமார் 900 பெண்கள் போட்டியிடுகின்றனர். மக்கள் பிரதிநிதிகளை தேர்தெடுக்கும் தேர்தல் ஒன்றில் சவுதியில் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.  சவுதியில் பொது இடங்களில் இருபாலாரும் ஒன்றாக இருப்பதற்கு கடுமையான தடைகள் உள்ளன.