வெள்ளி, 20 ஜனவரி, 2023

ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் மேலிட முடிவுக்காக காத்திருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் மேலிட முடிவுக்காக காத்திருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மாலைமலர் : இளங்கோவன் மிக மூத்த காங்கிரஸ் தலைவர். மத்திய மந்திரி, எம்.பி., மாநில தலைவர் என்று பல பதவிகளையும் வகித்தவர் கடந்த தேர்தலில் காங்கிரசுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 8 ஆயிரம்தான்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளரை இறுதி செய்யும் பணிகளை தமிழக காங்கிரஸ் மேலிடம் தொடங்கி உள்ளது.
கட்சி நடைமுறைப்படி வேட்பாளர் பெயர் பட்டியலை தேர்வு செய்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்ப வேண்டும். டெல்லி மேலிடம் வேட்பாளர் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
 மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை களம் இறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.


ஏற்கனவே மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ள இளங்கோவன்தான் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூறி விட்டனர்.
இளங்கோவன் மனதளவில் இன்னும் பாதிப்பில் இருந்து மீண்டு வராததால் இன்னும் போட்டியிடும் மனநிலைக்கு வரவில்லை.
ஆனால் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அனைத்தும் இளங்கோவன்தான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
தி.மு.க. தலைமையும் இளங்கோவன்தான் சரியான வேட்பாளராக இருக்க முடியும் என்று கருதுகிறது. தொகுதியில் பிரபலமானவர்.
தனிப்பட்ட செல்வாக்கு உடையவர். இப்போது மகனை இழந்திருப்பதால் அனுதாபமும் இருக்கும். எனவே வெற்றி வாய்ப்பு எளிதாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று வற்புறுத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: