வியாழன், 22 டிசம்பர், 2022

அருந்ததி ராய் ஒரு செலக்டிவ் புத்தி ஜீவி - ஒரு செலக்டிவ் இடதுசாரி - செலெக்டிவ் போராளி!

அருந்ததி ராய் : ஊழல்களிலேயே , '2ஜி ஊழல்' என்று அறியப்பட்டதுதான் மிகவும் மோசமானது அதில் அரசாங்கம் (அதாவது ஆ ராசா) மொபைல் போன்களுக்கான தொலைத்தொடர்பு அலைக்கற்றையை (பொது சொத்து) தனியார் நிறுவனங்களுக்கு அபத்தமான குறைந்த விலையில் விற்றது. நிறுவனங்கள் அவற்றை பெரும் லாபத்தில் மற்ற நிறுவனங்களுக்கு விற்று, பல கோடி ரூபாய் பொது கஜானாவை கொள்ளையடித்தன.

ராதா மனோகர் :  அருந்ததி ராய் ஒரு செலக்டிவ் புத்தி ஜீவி  ஒரு செலக்டிவ் இடதுசாரி .  மொத்தத்தில் ஒரு செலெக்டிவ் போராளி   
சில்லறையை சிதறவிட முன்பு கொஞ்சம்  ஹோம் வேர்க்  செய்து பாருங்கள் மக்காள் ..
 நாட்டின் எந்த விவகாரமானாலும்  திராவிட கோட்பாட்டை தாக்குவதற்கு வாய்ப்பு கிடைக்குமானால், .
இன்னும்  சரியாக சொல்லப் போனால் திமுகவை தாக்குவதற்கு ஒரு போலியான  வாய்ப்பு  கிடைக்குமானால் கூட வரிந்து கட்டிக்கொண்டு முன்வருகிறார்கள் என்றால்...
 இவர்கள் பார்ப்பனீய அடிமை மனோபாவம் கொண்டவர்கள்தான் .
அருந்ததி ராய்  போன்ற பார்ப்பன ஊடக வெளிச்சம் அளவுக்கு மீறி  உள்ளவர்கள் எல்லோரும் இந்த  ரகம்தான் . மீண்டும் மீண்டும் மேல்தட்டு இந்திய  இடதுசாரி தலைவர்கள் ஊடக மேதாவிகள் இலக்கிய வாதாபிகள் எல்லோருமே  பார்ப்பனீயம் இந்தியாவில் காக்கப்படவேண்டும் என்ற உள்ளுணர்வு  கொண்டவர்கள்தான் என்பதற்கு அருந்ததி ராயும் ஒரு அக்மார்க் உதாரணம்தான் .
இவர்கள்  எல்லோரும் சேர்ந்து தங்களை நம்பும் அடித்தட்டு மக்களின் போராட்டங்களின்  மீது தங்கள் கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் இருப்பவர்கள் .
போராட்டங்களில்  சாதாரண இடதுசாரி தொண்டர்கள் அடிபட்டு சாவார்கள் .
மேல்தட்டு இடதுசாரிகள்  தொடர்ந்து  அதிகாரத்திலும் ஊடக வெளிச்சத்திலும் இருப்பார்கள் .
ரங்கராஜன்   வாசுகி  பிருந்தா பிரகாஷ் காரத்துகள் எல்லாம் உயரத்தே இருப்பார்கள்.  
காங்கிரஸ் பாஜக ஆர் எஸ் எஸ் மற்றும் டெல்லி ஊடக ஜாம்பவான்கள் எல்லோரும்  இந்த மேல்தட்டு இடதுசாரிகளின் கிளப் விருந்துபசார கூட்டாளிகள்
இங்கே 2 ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி எல்லாம் தெரிந்த அருந்ததி ராய் சிந்திய விஷம் தோய்ந்த வார்த்தைகளில் சில ..
சுயமாக சிந்திக்க கூடிய எவராலும் புரிந்து கொள்ளக்கூடிய இந்த 2 ஜி  கட்டுக்கதை அருந்ததி ராய் போன்ற அதி புத்திசாலிகளால் புரிந்து கொள்ள  முடியாது என்று நான் நம்பமாட்டேன் .
எங்கோ ஒரு தூரத்தே இருந்த எனக்கே  இது சுத்த பித்தலாட்டமாக ஆரம்பித்தில் இருந்தே புரிந்தது .  
இதை ஒவ்வொரு  கட்டமாக எப்படி அவர்கள் கட்டமைத்தார்கள் என்பதை நேர்மையும் புத்தியும் உள்ள  எவரும் அறிந்திருப்பார்கள் .
அருந்ததிக்கு மட்டும் புரியாமல் போனது  எப்படி? " பார்ப்பனீய சிந்தனை"
The most scandalous of them was what has come to be known as the ‘2G  scam’ in which the government sold telecom spectrum for mobile phones (a  public asset) to private companies at ridiculously low prices. The  companies went on to sell them at huge profits to other companies,  robbing the public exchequer of billions of rupees

கருத்துகள் இல்லை: