செவ்வாய், 20 டிசம்பர், 2022

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமுக்குள் புகுந்த என்ஐஏ... புலிகளோடு தொடர்புடையவர்கள் உட்பட 9 பேர்.. ...

tamil.samayam.com  :  திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் ஐந்துக்கும் மேற்பட்டோர் துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் விசாரணையில் ஈடுபட்டுனர்.
கடந்த 2020 மார்ச் மாதம் கேரளா விளஞ்சியம் கடற்பகுதியில் சந்தேகத்தில் இடமாக கைது செய்யப்பட்ட படகிலிருந்து 300 கிலோ 323 கிராம் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, அந்த கடத்தலில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேற்கொண்ட விசாரணையில் அந்த கடத்தலில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சிலர் ஈடுபட்டதாகவும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு குற்ற வழக்கில் ஈடுபட்டு, திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாமில் உள்ளவர்களும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.
தொழிலில் நஷ்டம்... மனமுடைந்த ஃபேஷன் டிசைனர் எடுத்த துயர முடிவு!
இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் இதுவரை இல்லாத அளவிற்கு என்.ஜ.ஏ அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட துணை இராணுவத்தினரின் உதவியுடன் மத்திய சிறை வளாகத்தில் சோதனை நடத்தி லேப்டாப், மொபைல்ஃபோன் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றினர். லேப்டாப், செல்ஃபோன் உள்ளிட்டவர்களை சோதனை செய்ததில் சில முக்கிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான விசாரணைக்காக மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்து சிலரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல தேசிய புலனாய் முகமையின் கண்காணிப்பாளர் தர்மராஜ், திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து சுமார் 3 மணி அளவில் கண்காணிப்பாளர் தர்மராஜ் மாவட்ட ஆட்சியிரிடம் இருந்து 9 பேரை கைது செய்வதற்கான ஆலோசனை மேற்கொண்டு பின்னர் சிறப்பு முகாமிற்கு வந்தார்.

முகாமில் இருந்து குணசேகரன், புஷ்பராஜ், முகமதுஆஸ்மின், கோட்டாகாமினி, ஸ்டான்லிகென்னடிபெர்னான்டோ, தனுக்காராஜன், லாடியா, வெள்ளசாரங்கா, திலீப் ஆகிய 9 பேரை கைது செய்வதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கைது செய்யப்பட்ட 9 பேரும் சென்னை பூந்தமல்லி உள்ள NIA நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: