சனி, 24 டிசம்பர், 2022

Ex-ICICI Bank CEO Chanda Kochhar, Husband Arrested ஐசிஐசிஐ வங்கி சாந்தா கோச்சர் கணவர் தீபக் கோச்சார்.அதிரடி கைது.. கடன் மோசடி வழக்கு

 மாலை மலர்  :  புதுடெல்லி  ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் செயல்பட்டவர் சாந்தா கோச்சார். இவரது கணவர் தீபக் கோச்சார்.
இதற்கிடையே, 2009 முதல் 2011 வரையில் பதவியில் இருந்த காலத்தில் சாந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்திற்கு 1,875 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது.
அந்த கடன் தொகை சாந்தா கோச்சாரின் கணவர் நடத்தி வந்த நுபவர் சுப்ரீம் எனர்ஜி என்ற நிறுவனத்திற்கு பல்வேறு தவணைகளாக மாற்றப்பட்டது. மேலும், வீடியோகான் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட கடன் திரும்பி வராத கடனாக அறிவிக்கப்பட்டது.
இதனால், ஐசிஐசிஐ வங்கிக்கு 1,730 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக கடந்த 2018- ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரி, நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து சாந்தா கோச்சார் விலகினார்.


இதனை தொடந்து வீடியோகான் கடன் மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத் துறையினால் சாந்தா கோச்சார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி கடன் மோசடி செய்த வழக்கில் ஐசிஐசிஐ முன்னாள் தலைமை செயல் இயக்குனர் சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சாரை சிபிஐ அதிரடியாக நேற்று கைது செய்தது.

கருத்துகள் இல்லை: