சனி, 9 ஜூலை, 2022

சிவந்த மேனியில் சோழர்களா? கறுத்த மேனியில் ரசிகர்களா?

வாலாசா வல்லவன் : சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பிற்கால சோழர் வரலாற்றில் ஆதித்ய கரிகாலனை கொன்ற நான்கு பார்ப்பனர்கள் பெயர்களை கல்வெட்டு சான்றுகளோடு எழுதியுள்ளார்.

Vineshbabu R  :  ராஜராஜ சோழரின் சோழதேசத்தை முன் நின்று இயக்கிய முதன் மந்திரி அநிருத்த பிரம்மராயர் - பிராமணர்
ராஜராஜசோழர்  சோழ தேசத்தை ஆள முடிசூட்டி வைக்க ( Start camera சொல்ல)  காசுமீரத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவர்  -பிராமணர்
ஆதித்த கரிகால சோழனை கொன்று மதுராந்தகச் சோழரை அரியணை ஏற்றி சோழமண்ணை இயக்கிய  சோமன்,  ரவிதாஸன் போன்றோரும் பாண்டிநாட்டு  -பிராமணர்
பல்லாண்டுகளுக்கு பிறகு  பொன்னியின் செல்வனை புதினமாக எழுதி சோழத்தை நோக்கி தமிழ் வாசகர்களை இயக்கிய எழுத்தாளர் அமரர் கல்கி - பிராமணர்
அதை திரைக்காவியமாக்கி பெரும்பான்மை மக்களிடம் சோழத்தை கொண்டு சேர்ப்பவரும் ரோஜா படத்தை இயக்கிய இயக்குநர்  மணிரத்னம் - பிராமணர்
ஆமாம்
முதன்மந்திரிகளாகவோ,
முடிசூட்டுபவர்களாகவோ,
கொலை செய்பவர்களாகவோ,
பின் நின்று ஆள்பவர்களாகவோ,
எழுத்தாளர்களாகவோ,
திரை இயக்குநர்களாகவோ,
காலம் தோறும் பிராமணீயம்
நம்மை தொடர்ந்து  இயக்குகிறது.  
மன்னனாகவோ ,                                                
மக்களாகவோ,                                                   
வாசகர்களாகவோ,             
ரசிகர்களாகவோ,  விமர்சகர்களாவோ , எதிர்ப்பவர்களாகவோ,  ஆதரிப்பவர்களாகவோ,
நாமும் தொடர்ந்து  இயங்கிக்கொண்டே தான்  இருக்கிறோம் சிறிதும் கூச்சமின்றி.
சோழதேசத்து நாயகர்கள் எல்லோரும் செக்கச்சிவந்தவர்களாகவோ
இருக்கின்றனர் .
பூணூல் போட்ட பாலமுருகன் போல.
கை தட்டவும்,  கை கூப்பவும் தான்
கறுப்பர் கூட்டம் என்றென்றும் போல.

கருத்துகள் இல்லை: