வியாழன், 12 மே, 2022

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகிறார் .. நெருக்கடியை தவிர்க்குமுகமாக இடைக்கால பிரதமாராக 6 ஆவது முறையாக .. ?

May be an image of 1 person

சமூக வலைத்தளங்களில்  வரும் பிரேக்கிங் நியூஸ் :6 ஆவது தடவை பிரதமராக பதவியேற்கிறார் ரணில்!*
 இலங்கை அரசியல் வரலாற்றில் ஐ.தே.க. புதிய சாதனை*
 இரண்டாக உடைகிறது சஜித் அணி! வெளியேறினார் ஹரின்*
 அரசியலில் ரணில் கடந்து வந்த பாதை (1970-2022)*
*தனது அரசியல் வாழ்வில் தடைக்கற்களையெல்லாம் படிக்கற்களாக மாற்றி, சவால்களை முறியடித்து சோதனையைக்கூட சாதனையாக மாற்றியமைக்கும் அரசியல் த(ம)ந்திரம் கற்றுவைத்துள்ள -  ரணில் விக்கிரமசிங்க, 6 தடவையாகவும் பிரதமராக பதவியேற்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றிரவு வெளியிடப்படும்.*
*பிரதமர்  பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகி, இரு நாட்கள் கடக்கவுள்ள நிலையிலும், புதிய பிரதமரின்கீழ் ஆட்சி அமையவில்லை. இந்நிலைமை நீடித்தால் இலங்கை பொருளாதாரம் மேலும் வங்குரோத்தடையும். அதேபோல இராணுவ பிரசன்னமும்  அதிகரிக்கப்பட்டால் சர்வதேச உதவிகள் தடைபடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.*


*பிரதமர் பதவியை ஏற்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்பதற்கு, ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனை சஜித் தரப்பில் இருந்து விடுக்கப்பட்டது. ஜே.வி.பியும் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளது.*
*இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. நாட்டில் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 19 ஐ மீள செயற்படுத்தும் நிபந்தனையுடன் - நாட்டு நிலையைக் கருதி, பதவியை ஏற்பதற்கு ரணில் சம்மதம் தெரிவித்துள்ளார்.*
*ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை. ஏற்கனவே பதிவிட்டது. தற்போது மீள்பதிவு செய்யப்படுகின்றது.*
*✍️பிறப்பு - 1949 மார்ச் 24.*
*✍️தந்தை - எஸ்மண்ட் விக்கிரமசிங்க.*
*✍️தாய் - மாலினி விக்கிரமசிங்க.*
 *✍️மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி. ரணில் இரண்டாவது மகன்.*
*✍️ ஆரம்பக்கல்வி - கொழும்பு ரோயல் கல்லூரி.*
*✍️உயர்கல்வி - கொழும்பு பல்கலைக்கழகம், சட்டத்துறை.*
*✍️ஐ.தே.கவின் இளைஞர் முன்னணி ஊடாக அரசியல் பயணம் ஆரம்பம். 1970 இல் களனி தொகுதி அமைப்பாளராக நியமனம். அதன்பின்னர் பியகம தொகுதி கையளிப்பு.*
*✍️1977 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் பியகம தொகுதியில் போட்டி. 22 ,045 வாக்குகளைப்பெற்று வெற்றிநடை.*
*✍️28 ஆவது வயதில் பிரதி வெளிவிவகார அமைச்சராக நியமனம்.*
*✍️1977 ஒக்டோர் 05 ஆம் திகதி அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டு இளைஞர் விவகார மற்றும் தொழில் அமைச்சு பதவி ஒப்படைப்பு.*
*✍️1980 பெப்ரவரி 14 கல்வி அமைச்சு பதவி கையளிப்பு. 9 ஆண்டுகள் அப்பதவியில் நீடித்த அவர், கல்வித்துறையில் நவீன யுகத்துக்கேற்ப பல மறுசீரமைப்புகளை மேற்கொண்டார்.*
 *✍️1993 மே 17 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்பு.*
 *✍️1994 இல் ஐ.தே.க. தலைவராக ரணில் விக்கிரமசிங்க நியமனம். கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் தாய்வீடு திரும்பிய காமினி திஸாநாயக்க பிரதான எதிர்க்கட்சி தலைவரானார்.காமினி திஸாநாயக்க கொல்லப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி தலைவராகவும் ரணில் செயற்பட்டார்.*
 *✍️1995 - திருமண வாழ்வில் இணைவு. களனிப் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியையான மைத்திரி விக்கிரமசிங்கவை கரம்பிடித்தார்.*
 *✍️1999 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க முதன்முறையாக போட்டி. சந்திரிகாவே வெற்றிபெற்றார். ரணிலுக்கு 42.71% வாக்குகள் கிடைத்தன.*
 *✍️2000 ஒக்டோபர் 10 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றி. ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் 2001 டிசம்பர் 05 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.*
 *✍️2001 டிசம்பர் 09 ஆம் திகதி ரணில் பிரதமரானார். 2004 ஏப்ரல் 2 ஆம் திகதிவரை பதவியில் நீடித்தார்.*
*✍️நாடாளுமன்றத்தில் ஆயுட்காலம் முடிவடைவதற்குள்ளேயே நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்திரிக்கா நாடாளுமன்றத்தைக் கலைத்து 2004 ஏப்ரல் 2 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. ஐ.தே.க. ஆட்சி கவிழ்ந்தது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 3 இலட்சத்து 29 ஆயிரத்து 524 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.*
*✍️2005 நவம்பர் 17 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிட்டார். 47 இலட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளைப் பெற்றார். இத்தேர்தலில் மஹிந்தவே வெற்றிபெற்றார்.*


 *✍️2010 ஜனவரி 26 ஆம் திகதி ஆறாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மஹிந்த களமிறக்கினார். அவருக்கு எதிராக எதிரக்கட்சிகளின் சார்பில் – இறுதிப்போரை வழிநடத்திய இராணுவத்தளபதி சரத் பொன்சேக்கா களமிறக்கப்பட்டார்.*
*✍️ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் களமிறங்கவில்லை என்பதுடன், யானை சின்னத்துக்கு பதிலாக அன்னப்பறவை சின்னமே முன்னிலைப்படுத்தப்பட்டது. இத்தேர்தலில் மஹிந்தவே வெற்றிபெற்றார்*

இத்தேர்தலில் வட மாகாண மக்கள் தேர்தலை புறக்கணிக்குமாறு புலிகளால் மக்களுக்கு ஆணை விடப்பட்டிருந்தது
இதற்காக மகிந்த ராஜபக்சவிடம் இருந்து புலிகள்  பெருமளவு பணம் பெற்றதாக பின்பு தெரியவந்தது
இதன் காரணமாகவே ரணில் தோல்வி அடைந்தது என்பது எல்லோரும் அறிந்ததே.
 

*✍️2010 ஏப்ரல் 4 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ரணிலின் தலைமைத்துவத்தின்கீழ் யானை சின்னத்திலேயே ஐக்கிய தேசியக்கட்சி போட்டியிட்டது. தேர்தலில் தோல்வி. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 2 இலட்சத்து 32 ஆயிரத்து 957 வாக்குகளைப் பெற்றார்.
*✍️2015 ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் விட்டுக்கொடுப்புகளை செய்யவேண்டியநிலை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டது. மஹிந்த அரசிலிருந்து வெளியேறிய சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பொதுவேட்பாளராக களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.*
*மைத்திரி ஜனாதிபதி, ரணில் பிரதமர் என்ற தொனியிலேயே பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டன. 62 இலட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்று மைத்திரி வெற்றிபெற்றார். மஹிந்தவின் 10 ஆண்டுகால சாம்ராஜ்யமும் சரிந்தது.*
*✍️2015 ஜனவரி 9 ஆம் திகதி பிரதமராக ரணில் பதவியேற்றார். இதனால், மஹிந்தவின் அமைச்சரவையும் கலைந்தது.*
*✍️2015 ஆகஸ்ட் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சி 106 ஆசனங்களைக் கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும் தேசிய அரசமைத்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.*
*✍️கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 5 இலட்சத்து 566 வாக்குகளைப் பெற்று மீண்டும் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தார்.*
*✍️2018 ஒக்டோபர் மாதம் ஆட்சிகவிழ்ப்பு சூழ்ச்சிமூலம் மஹிந்தவை, ஜனாதிபதி மைத்திரி பிரதமராக்கினார். எனினும், நீதிமன்றத்தைநாடி சவால்களையெல்லாம் சமாளித்து மீண்டும் பிரதமரானார் ரணில். நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் மண்கவ்வ செய்தார்.*
 *✍️2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற  இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறியாகவே இருந்தார். எனினும், கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்ததால், பங்காளிகள் விடாப்பிடியாக நின்றதாலும், நாட்டு மக்கள் சஜித்தை கோரியதாலும் மூன்றாவது முறையும் தியாகம் செய்யவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.*
*எனினும், 1994 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐக்கிய தேசியக்கட்சியை சார்ந்த உறுப்பினர் ஒருவரை வேட்பாளராக களமிறக்கும் வாய்ப்பு உதயமானது.*
*✍️ 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்வியடைந்தது. அதன்பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக உடைந்தது. சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி உயதமானது.*
 *✍️2020 பொதுத்தேர்தலில் இரு அணிகளும் தனியாக போட்டியிட்டன. ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக்கட்சிக்கு நாடு முழுவதும் 2.15% வாக்குகளே கிடைக்கப்பெற்றன.தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பு கிடைத்தது.*
*✍️நாடாளுமன்ற அரசியலுக்கு வந்த பிறகு ரணில் எந்தவொரு பொதுத்தேர்தலிலும் தோற்றதில்லை. 42 வருடங்களாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனையும் படைத்துள்ளார். 2020 இல் தோல்வியை தழுவினார். எனினும், தேசியப்பட்டில் ஊடாக சபைக்கு நாடாளுமன்றம் வந்தார்.*
 *அரசியலில் குள்ளநரியாகவே அவர் பார்க்கப்படுகின்றார். 42 ஆசனங்களை வைத்துக்கொண்டு ஆட்சியைப்பிடித்ததுடன், அரசமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தினார். எனவேதான் தற்போது ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு பிரதமராகின்றார்.*
*அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாக பிளவு படும் என தெரியவருகின்றது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ சுயாதீனமாக செயற்படும் முடிவை அறிவித்துள்ளார்*
Copied

கருத்துகள் இல்லை: